அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

சனி, 13 ஆகஸ்ட், 2011

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு

நீல வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் சுனாமி விவகாரம் நடந்த போது நாம் உணர்வில் எழுதியவை. கறுப்பு வண்ணத்தில் உள்ளவை இப்போது எடுத்துக் காட்டுபவவை

தமுமுக இயக்கத்தை நாமும் நாட்டில் உள்ள நன்மக்களும் சுனாமித் திருடர்கள் என்ற அடைமொழி கொடுத்து குறிப்பிட்டு வருகிறோம். இவர்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற பட்டம் ஏன் கிடைத்தது என்ற விபரம் புதிய தலைமுறைக்கு தெரியாது என்ற நம்பிக்கையில் சுனாமி தொடர்பாக நம்மைப் பார்த்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இவர்கள் எழுப்பும் கேள்விகள் புதியவை அல்ல. ஏற்கனவே கேட்கப்பட்டு அப்போதே உணர்வு இதழ் மூலம் பதிலளிக்கப்பட்டவை தான். நம்மை நோக்கி கேள்வி எழுப்புவோரின் முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இறுதி தொடரில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்
திருடிக் கொண்டு ஓடுபவன் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டு திருடனைப் பிடிக்க ஓடுவது போல் சுனாமித் திருடர்களான தமுமுகவினர் தங்களின் திருட்டை மறைக்கப் பார்க்கின்றனர். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுனாமித் திருடர்களின் வண்டவாளம் அன்றைக்கே எப்படி தண்டவாளத்தில் ஏறியது என்பதை விளக்க நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த தமுமுக வினருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

பின்னணி என்ன?

சுனாமியின் போது தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது போல் தமுமுகவும் நிதி திரட்டியது. அந்த நிதி சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் கணக்குக் காட்டவில்லை என்றும் உணர்வில் முன்னுக்குப் பின் முரண் உள்ளது என்றும் குற்றம் சாட்டி நபிவழி தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு பிரசுரம் அச்சிடப்பட்டு அது தமிழகத்தின் பல ஊர்களின் தமுமுக வினரால் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து உணர்வு வாசகர் ஒருவர் உணர்வு இதழில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 5. ல் வெளியான அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு:
கேள்வி : சுனாமி கணக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு நீங்கள் தெரிவித்துள்ள காரணத்தை அடிப்படையாகக் கொண்டு பினாமி பிரசுரம் வெளியிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இஸ்மாயில், நேதாஜிநகர், சென்னை.
பதில் : நபிவழி தவ்ஹீத் என்ற பெயரில் தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இல்லை. இல்லாத அமைப்பின் பெயரில் இப்பிரசுரத்தை இலட்சக்கணக்கில் தமிழகத்தின் பல ஊர்களில் தமுமுக நிர்வாகிகளே விநியோகம் செய்ததற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன.
இருக்கின்ற அமைப்பின் பெயரில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை இவர்கள் விநியோகம் செய்தால் பிரசுரத்தை இவர்கள் அச்சிடவில்லை விநியோகம் மட்டுமே செய்தனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இல்லாத அமைப்பின் பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரசுரம் விநியோகிக்கிறார்கள் என்றால் இதை அச்சிட்டவர்களே இவர்கள்தான் என்பது தெளிவாகிறது. எனவே பினாமி பிரசுரம் வெளியிட்ட அவர்களுக்கு எனது பகிரங்க சவாலை பதிலாக வெளியிட்டுள்ளேன். அதை 8 ம் பக்கச் செய்தியில் காண்க. பிரசுரத்தில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் எவ்வளவு விஷமத்தனமானவை என்பதைப் பார்ப்போம்.
பகிரங்க அறிவுப்புச் செய்து நிதி திரட்டும் போது அதுபற்றிய தகவலை உடனடியாக வெளியிடும் போது கடைசி நேரத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று தான்.
நாம் இணைந்திருந்த காலத்தில் கோவை கலவர நிவாரண நிதி, பழனிபாபா கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டோர்களுக்கான நிவாரண நிதி ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்ட போது இது போல் திருத்தங்களை வெளியிட்டுள்ளோம். மக்களுக்கு உண்மையாகக் கணக்குக் காட்டக் கூடியவர்கள் நிச்சயம் இது போன்ற நிலையைச் சந்திப்பார்கள். இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
துபாயில் உள்ள ஒருவர் பத்து நபர்களிடம் திரட்டிய பத்தாயிரம் ரூபாயை அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது பற்றிய விபரம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் பெயரில் பத்தாயிரம் வெளியிடப்படும். சில நாட்கள் கழித்து அவர் கடிதம் எழுதி பத்தாயிரம் என்னுடைய பணம் அல்ல. பத்துப் பேரிடம் திரட்டிய தொகை, எனவே அவர்களது பெயர்களையும் வெளியிடவும் என்று அதில் குறிப்பிடுவார்.
இந்தத் தகவல் ஜமாத் மூலம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பாலும் இந்த விபரங்கள் சரியாகவே வெளியிடப்பட்டு விடும். ஆனாலும் சில நேரங்களில் கவனமின்மையால் ஏற்கனவே வெளியான பட்டியலின் விரிவாக்கம் என்று வெளியிடுவதற்குப் பதிலாக மீண்டும் பத்தாயிரம் ரூபாயை பத்துப் பேரின் பெயரில் வெளியிட்டு விடுவதுமுண்டு. இப்படி நடந்திருப்பதால் உணர்வில் வெளியான பட்டியலுடன் தலைமையில் உள்ள கணக்குகள் ஒத்துப் போகாமல் ஆகிவிடும்.
இவ்வாறு பிழை ஏற்பட்ட பட்டியலைக் கண்டுபிடித்து சரி செய்கிறோம் என்று கூறுவது எப்படி மோசடியாகும்?
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பத்தாயிரம் அனுப்புகிறார்கள் என்றால் அந்தப் பெயரில் அந்தத் தொகை வெளியிடப்படும். இந்தந்தக் கிளைகள் மூலம் வழங்கியது என்ற விரிவாக்கப் பட்டியலை தாமதமாக அவர்கள் அனுப்பும் போது அது மற்றொரு தடவை உணர்வில் வெளியாகி விடுவதுண்டு.
இது போன்ற தவறுகள் ஏற்படுவதை நாம் உணர்வில் வெளியிடாமலேயே காலம் கடத்த முடியும். ஏன் தாமதமாகிறது என்ற சந்தேகத்தை மக்களுக்கு விளக்குவது அவசியம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களிடம் ஏற்பட்ட பிழையை மறைத்து பொய்யான காரணம் சொல்ல நாம் விரும்பவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்ட இப்பிழையைத் தான் மோசடி என்று பிரசுரம் வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்குத் தாங்கள் கணக்கு காட்டப் போவதில்லை என்று நினைப்பவர்களுக்கும் சுருட்டிக் கொண்டவர்களுக்கும் இது போன்ற விளக்கம் அளிக்கும் அவசியம் ஏற்படப் போவதில்லை.
கணக்கை முறையாக வெளியிடுபவர்களுக்கு இது போன்ற நிர்பந்தம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
(எனது பொருளாதார நிலை பற்றியும் பினாமி பிரசுரத்தைப் பரப்பி வருகின்றனர். எனது முதல் பிரசுரம் மக்களைச் சென்றடைந்தவுடன் எனது இரண்டாம் பிரசுரம் விரைவில் வரும். இவர்களின் முகத்திரை முழுமையாகவே கிழியும். இவர்கள் பரப்பும் மொட்டைப் பிரசுரங்களை இவர்கள் வெளியிடுவதாகவே எடுத்துக் கொண்டு இவர்களை நேருக்கு நேர் சந்திப்பேன். இன்ஷா அல்லாஹ்)
இஸ்மாயீல் என்ற சகோதரரரின் கேள்விக்கு உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 5. ல் நான் மேற்கண்டவாறு பதில் அளித்ததுடன் பகிரங்க அறை கூவலுக்கான அழைப்பையும் அதே இதழில் வெளியிட்டேன். அந்தப் பகிரங்க அழைப்பிலேயே உங்களுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்து விடும்.
அந்த பகிரங்க அழைப்பு இது தான்
இறைவனின் திருப்பெயரால்
.மு.மு..வுக்குப் பகிரங்க அறை கூவல்
சுனாமி நிவாரண நிதியைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஒரு துண்டுப் பிரசுரத்தை .மு.மு.கவினர் தமிழகமெங்கும் வினியோகம் செய்து வருகின்றனர்.
தங்கள் இயக்கத்தின் பெயரில் வெளியிடாமல் வழக்கம் போலவே பினாமி பிரசுரமாக அதைப் பரப்பி வருகின்றனர்.
பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதிகளுக்கு வெளிப்படையான கணக்கை வெளியிடும் அவசியத்தை இதன் மூலம் .மு.மு.கவினர் ஒப்புக் கொண்டதற்கு அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.
அந்த இயக்கத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்த பின், .மு.மு.கவும், தவ்ஹீத் ஜமாஅத்தும் பொதுமக்களிடமிருந்து பகிரங்க அறிவிப்பு செய்து, மூன்று தடவை நிதிகளை வசூலித்தன.
1.  2004 ஃபித்ரா
2. சுனாமி நிவாரண நிதி
3.  2005 ஃபித்ரா
1. 2004 ஃபித்ரா
2004 ஆம் வருடம் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஃபித்ராவை) தவ்ஹீத் ஜமாஅத்தும் திரட்டியது. தமுமுகவும் திரட்டியது.
இலட்சக்கணக்கில் தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதிக்குரிய கணக்கை உடனடியாக உணர்வு இதழில் வெளியிட்டது.
தமுமுகவும் இலட்சக்கணக்கில் நிதியைத் திரட்டியது. மிகச் சிறிய அளவுக்கு மட்டுமே மக்களுக்கு வழங்கியதால் 13 மாதங்கள் கடந்த பின்பும் இன்று வரை அந்தக் கணக்கை தமுமுக வெளியிடவில்லை.
2. சுனாமி நிவாரண நிதி
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்காக இலட்சக்கணக்கான ரூபாய்களை தவ்ஹீத் ஜமாஅத் திரட்டியது.
தமுமுகவும் இலட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டியது.
தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதியில் 95 சதவிகிதத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவிட்டது. எஞ்சியதை விரைவில் வழங்கிவிட்டு கணக்குகளைச் சரி செய்து மிக விரைவில் உணர்வு இதழில் வெளியிடுவதாக தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளது.
ஆனால் தமுமுக 68 லட்சம் ரூபாய் திரட்டியதாக தனது பத்திரிகையில் வெளியிட்டது. திரட்டிய 68 லட்சம் ரூபாயில் 10 சதவிகிதத்தைக் கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை வழங்கவில்லை.
68 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது?
கணக்கு வெளியிடப்படுமா?
எப்போது வெளியிடப்படும்?
என்பது பற்றி தமுமுக மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் வெட்கமில்லாமல் பினாமி பிரசுரத்தை தமுமுக வினியோகம் செய்து வருகின்றது.
3. 2005 ஃபித்ரா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 2005ம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் தர்மத்தை 25 லட்சத்திற்கு மேல் திரட்டியது. அனைத்தையும் தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் வினியோகம் செய்து விட்டது.
இதன் முழுக் கணக்கையும் உணர்வு இதழில் முழுமையாக தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுவிட்டது.
ஆனால் தமுமுக இது பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் படம் (?) காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது.
மூன்று கணக்குகளுக்கும் பொதுவிசாரணை
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுகவும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
இரண்டு இயக்கங்களுமே பொது விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் இரண்டு இயக்கங்களின் நேர்மையை நிரூபிக்க ஏற்ற வழியாகும்.
தமிழகத்தில் மக்களால் ஓரளவு அறியப்பட்ட இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து இரண்டு இயக்கங்களும் அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும் ஒப்படைத்து பொது விசாரணைக்கு முன்வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
தமிழகத்தில்,
1.  முஸ்லீம் லீக்.
2.  தேசிய லீக்.
3.  ஜமாஅத்துல் உலமா சபை
4.  ஜமாஅத்தே இஸ்லாமி
5.  இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
6. மனித நீதிப் பாசறை
ஆகிய இயக்கங்கள் மக்களால் அறியப்பட்ட இயக்கங்களாக உள்ளன.
இந்த இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து, அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும் இரண்டு இயக்கங்களும் ஒப்படைத்து பொது விசாரணைக்கு முன்வர வேண்டும்.
* அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போது விசாரணைக் குழுவில் தமுமுக இடம் பெற வேண்டும்.
* தமுமுக கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போது விசாரணைக் குழுவில் தவ்ஹீத் ஜமாஅத் இடம் பெற வேண்டும்.
இந்த இயக்கங்கள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை விட தமுமுகவுக்கே நெருக்கமாக உள்ளன. சில இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரானவை.
அப்படி இருந்தும் இவர்களைக் கொண்டு அமைக்கப்படும் விசாரணைக்கு
தவ்ஹீத் ஜமாஅத் தன்னை உட்படுத்தத் தயார்!
தமுமுக மாநிலத் தலைமை தயாரா?

2004, 2005 பித்ரா கணக்குகள்,
சுனாமி நிவாரண நிதியின் வரவு செலவு கணக்குகள்
ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்த தமுமுக முன்வர வேண்டும்.
அந்த விசாரணைக் குழுவில் தனது நேர்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்துக் காட்டும். மேலும் மேற்கண்ட மூன்று நிதியிலும் தமுமுக பெருமளவு ஊழல் செய்துள்ளதை நான் நிரூபிப்பேன்.
தமுமுக நல்ல இயக்கம் என்று நம்பி அவர்கள் அனுப்பும் அவதூறுப் பிரசுரங்களைப் பரப்பும் அப்பாவிகளே! விசாரணைக்கு முன்வருமாறு உங்கள் தலைமையை வற்புறுத்துங்கள்! அவர்கள் முன்வந்தால் நீங்கள் அந்த இயக்கத்தில் இருந்ததற்காக நீங்கள் வெட்கப்படும் அளவுக்கு விசாரணையில் தெளிவாகும்.
விசாரணைக்கு உடன்பட மறுத்தால் நீங்கள் இதுவரை இருந்த இயக்கத்தின் இலட்சணத்தை அப்போதும் நீங்கள் விளங்கலாம்.
இவர்களுக்கு நிதி உதவி செய்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இவர்கள் விசாரணைக்கு உட்பட மறுத்தால் இவர்களுக்கு நிதி உதவி செய்வதால் பாவம் தான் ஏற்படும் என்பதை உணருங்கள்.
விசாரணைக்கு உட்பட மறுத்தால் நமது இந்தப் பிரசுரத்துக்கு எதிராக நீதிமன்றத்தையாவது அனுகட்டும்! இவர்களைச் சட்டபூர்வமாக அம்பலப்படுத்த அது ஒரு வாய்ப்பாக அமையும்.
இதுமெட்டைப் பிரசுரம் அல்ல! பி. ஜைனுல் ஆபிதீன் விடுக்கும் நேரடி அறைகூவல்.
இதற்குத் தயார் என்றால் எனது கீழ்க்கண்ட முகவரிக்கு தமுமுக தொடர்பு கொள்ளலாம்.
இவர்களைத் தோலுரித்துக் காட்டும் யுத்தத்தின் துவக்கம் தான் இது!
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்,
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை1,
(உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 8.)
மேற்கண்டவாறு நான் அறைகூவல் விட்டேன். அழைப்பு விட்டது மட்டுமின்றி நடுவர்களாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலமும் கொடுத்தோம்.
அது பற்றியும் உணர்வு இதழில் நான் எழுதிய விபரத்தில் இருந்து நீங்கள் கூடுதல் தெளிவைப் பெறலாம்.
நான் சவால் விட்டவுடன் அந்த சமாதானக் குழுவை ஏற்றுக் கொள்வதாக தமுமுகவும் ஒப்புக் கொண்டு தனது மக்கள் உரிமை இதழில் எழுதியது. அதன் பின்னர் தான் மேற்படி ஆறு இயக்கத்தினர் தவ்ஹீத் ஜமாஅத்தையும் தமுமுகவையும் விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அந்த ஆறு இயக்கத்தினரும் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களை இதற்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பஷீர் அஹ்மது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தமுமுகவுக்கும் பொது விசாரணைக்கு ஒத்துழைப்பு கேட்டு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதமே உங்களுக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
அந்தக் கடிதம் இது தான்.
இந்தக் கடிதம் வந்த உடன் விசாரணைக்காக அழைக்கப்பட்ட இடத்துக்கு வந்து எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்க சம்மதம் தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் எழுத்து மூலம் பதில் கொடுத்தது.
இந்தப் பொதுவிசாரணை மூலம் தவ்ஹீத் ஜமாஅத் தனது அப்பழுக்கற்ற தன்மையை நிரூபிக்கவும் சுனாமி பணத்தையே தின்ற பாவிகளை இனம் காட்டவும் தயாராக இருந்தது. இந்த நடுவர்களின் அழைப்புக்கு தவ்ஹீத் ஜமாஅத் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தது. அந்தப் பதில் உணர்விலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அந்தப் பதில் இது தான்:
இறைவனின் திருப்பெயரால்
நடுவர்கள் அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றது தமுமுக ஏற்குமா?
அன்பிற்குரிய இஸ்லாமியப் பொது மக்களே! பொதுமக்களின் நிதியில் மோசடி நடந்துள்ளதா என்பதை விசாரிக்கும் விசாரணைக் குழு வருகின்ற 10.11.2005 அன்று தவ்ஹீத் ஜமாஅத்தையும் தமுமுகûவுயும் தான் ஏற்பாடு செய்த இடத்துக்கு அழைத்துள்ளது.
நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களை மதித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், அவர்கள் அழைத்த நாளில் அழைத்த இடத்துக்குச் சென்று அவர்கள் கேட்டுக் கொள்ளும் உறுதிமொழிப் பத்திரம் வழங்கவுள்ளனர்.
ஃபித்ரா, சுனாமி நிதி குறித்து அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் வழங்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
நடுவர்கள் வரிக்கு வரி கணக்குகளைப் பரிசீலனை செய்ய முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவும் தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
தமுமுக தனது மேற்கண்ட மூன்று நிதிகளிலும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளது, உண்மை என்றால் நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களின் முன் ஆஜராக வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (tntj),
மாநிலத் தலைமையகம்.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 3)
ஆனால் நடுவர்களை ஏற்றுக் கொண்டதாக சீன் காட்டிய தமுமுக நடுவர்கள் முன்னால் ஆஜராக மறுத்து விட்டது. தாங்கள் ஒரு மண்டபத்தில் காத்திருப்பதாகவும், அங்கே நடுவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையுடன் வர வேண்டும் என்று பதில் கொடுத்து பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்தது.
அது குறித்து தங்கள் பத்திரிகையில் என்னைப் பற்றி தரக்குறைவாக திட்டி தீர்த்தனர். பொது விசாரணக்கு தயார் ஆனால் தயாரில்லை என்ற பாணியில் அவ்ர்களின் பதில் அமைந்திருந்தது. இது பற்றி நான் உணர்வு இதழில் வரிக்கு வரி அளித்த பதில் வருமாறு:
இறைவனின் திருப்பெயரால்
சவாலை ஏற்க மறுக்கும் .மு.மு..
தமுமுக 2004 ஆம் ஆண்டு திரட்டிய ஃபித்ரா கணக்கையும், 2005 ம் ஆண்டு திரட்டிய ஃபித்ரா கணக்கையும் வெளியிடவில்லை என்பது ஊரறிந்த உண்மை. அது போல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டிய நிதியின் பட்டியலை வெளியிட்ட தமுமுக அதை விநியோகித்த விபரங்களை வெளியிடவில்லை. இதுவும் நாடறிந்த உண்மை.
பொதுமக்களுக்குச் சேர வேண்டியதைப் பொதுமக்களுக்குச் சேர்த்துவிட வேண்டும் என்ற நன்னோக்கில் தான் பி.ஜைனுல் ஆபிதீனாகிய நான் அறைகூவல் விட்டேன்.
நான் சுட்டிக்காட்டிய மூன்று நிதிகளையும் முறையாக விநியோகம் செய்திருந்தால் ஏற்க வேண்டிய விதத்தில் எனது அறைகூவலை தமுமுக ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தாங்கள் பொது விசாரணைக்குத் தயாரில்லை என்பதை சவாலை ஏற்கிறோம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
இப்பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத பல விஷயங்களைக் குறிப்பிட்டு பிரச்சனையைத் திசை திருப்ப முயன்றுள்ளனர்.
பொது விசாரணைக்குத் தொடர்பு இல்லாத அதைப் பற்றி விளக்குவதற்கு முன் பொது விசாரணை பற்றி அவர்கள் கூறியுள்ளதை அலசுவோம்.
பொதுவிசாரணை பற்றி
நமது அறிக்கையில் நாம் விட்ட அறைகூவல் என்ன? இவர்கள் அளித்த பதில் என்ன? என்பதைக் கொஞ்சம் ஈடுபாட்டுடன் கவனிப்பவர்கள் கூட தமுமுகவினர் பொது விசாரணைக்குத் தயாராக இல்லை என்பதையும், பொது விசாரணையிலிருந்து பின்வாங்கி ஓட்டம் பிடிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
(தமுமுக நிர்வாகி ஒருவரின் உள்ளக் குமுறல் தனியாக இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்.)
* முஸ்லீம் லீக், தேசிய லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா, மனித நீதிப் பாசறை, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய இயக்கங்கள் சார்பில் தலா இருவர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
* அந்த விசாரணைக் குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் தங்களின் மூன்று கணக்குகளையும் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். விசாரணைக் குழு இந்தக் கணக்குகள் தொடர்பாக கேட்கும் அனைத்து தகவல்களையும் இரண்டு இயக்கத்தினரும் அந்தக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இது தான் பொதுவிசாரணை!
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுக தலைமை எவ்வித முறைகேடும் செய்யாமல், எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப்பட்டதோ அதற்கே நிதியைச் செலவிட்டிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
தங்களின் நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் நேர்மையைச் சந்தேகமற நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி முன்முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
* ஆனால், இவர்கள் நடுவர்களை மதிக்காமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டு நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டனர்.
பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நீங்கள் முயற்சியுங்கள்என்று கூறினால் அது சரியான பதிலாக இருந்திருக்கும்.
பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நாங்களே முன்முயற்சி எடுக்கிறோம்என்று அவர்கள் பதிலளித்திருந்தால் அதுவும் கூட சரியான பதிலாக அமைந்திருக்கும்.
பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; இருவரும் சேர்ந்து நடுவர் குழுவை அமைக்க முயற்சிப்போம்என்று கூறியிருந்தால் அதுவும் சரியான பதிலாக அமைந்திருக்கும்.
ஆனால், தமுமுக தலைமை தன்னை நடுவராக்கிக் கொண்டு, ஆறு இயக்கங்களையும் தன்னால் விசாரிக்கப்படக் கூடியவர்களாக ஆக்கி அநியாயமான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* அதாவது பத்தாம் தேதியன்று ஒரு மண்டபத்தில் தமுமுக நிர்வாகிகள் இருப்பார்களாம்!
* இவர்களைத் தேடிக் கொண்டு நடுவர்களான ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் செல்ல வேண்டுமாம்.
* ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் இயக்கத்தின் உறுப்பினர் அட்டையைக் கொண்டு வர வேண்டுமாம்!
இப்படி அறிவித்துள்ளனர். இதில் அறைகூவலை ஏற்கும் அம்சம் கடுகளவு கூட இல்லை.
எவரும் தங்களை விசாரிக்க முடியாது என்ற ஆணவப் போக்கு தான் இதில் உள்ளது.
யுத்தத்தின் தொடக்கம்
அடுத்து யுத்தத்தின் தொடக்கம் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இதற்கு வன்முறை அர்த்தம் கற்பித்துள்ளனர். நோட்டீஸை வெளியிட்டு இந்த நோட்டீஸ் யுத்தத்தின் துவக்கம் என்று கூறினால் அது போல பிரசுரங்கள் மூலம் யுத்தம் தொடரும் என்று தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நீதிபதிகளுக்கு ஆணையிடும் பிரதிவாதிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் அந்த மூன்று கணக்குகளில் வாதிகளாகவும், பிரதிவாதிகளாகவும் உள்ளனர். ஆறு இயக்கங்களும் நீதிபதிகளாகவுள்ளனர்.
இந்தப் பொது விசாரணைக்குத் தயார் என்பதை மட்டும் தான் வாதிகளும், பிரதிவாதிகளும் கூறவேண்டும்.
அதை எப்படி அமைத்துக் கொள்வது?
எந்த இடத்தில் வைத்துக் கொள்வது?
எத்தனை நாளில் விசாரணையை முடிப்பது?
என்பதையெல்லாம் பொது விசாரணைக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்.
பொது விசாரணைக் குழு எடுக்க வேண்டிய முடிவை இவர்களே எடுத்தால் மானமுள்ள எந்த இயக்கமாவது இதை ஏற்றுக் கொள்ளுமா?  ”நமக்கு உத்தரவு போடுபவர்கள் நமது விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்கள்”  என்று நினைக்க மாட்டார்களா?
அம்மூன்று கணக்குகள் விஷயங்களில் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு இயக்கங்கள் தான் நம்மைத் தேடி வர வேண்டுமே தவிர நாம் ஏன் இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்என்று நினைக்க மாட்டார்களா?
அப்படி நினைத்து நீதிபதிகள் ஒதுங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவே மேற்கண்ட அறிவிப்பைச் செய்துள்ளதை சிறிதளவு சிந்தனை படைத்தவர்களும் அறிவார்கள்.
அதுமட்டுமின்றி மேற்கண்ட ஆறு இயக்கத்தின் சார்பில் கலந்து கொள்ளும் நீதிபதிகள் குழுவினர், உறுப்பினர் அட்டையோடு இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆணவத்தின் உச்சக்கட்டம். மேலும் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுப்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்.
ஏனெனில் மேற்கண்ட ஆறு இயக்கங்களில் நாமறிந்த வரை இரு இயக்கம் தவிர மற்ற இயக்கங்களில் உறுப்பினர் அட்டை வழங்கும் முறை கிடையாது. இது தமுமுக தலைமைக்கும் நன்றாகத் தெரியும். எனவே, உறுப்பினர் அட்டை இல்லாமல் தான் அவர்கள் வருவார்கள் என்பதும் தமுமுக தலைமைக்குத் தெரியும்.
நடுவர்களிடம் உறுப்பினர் அட்டை இல்லை என்று தெரிந்திருந்தும் உறுப்பினர் அட்டையுடன் நடுவர்கள் வரவேண்டும் என்று கூறியிருப்பது நடுவர்களை விரட்டியடித்து பிரச்சினை ஏற்படுத்தவா?  விசாரணைக்கு உட்பட்டு நேர்மையை நிரூபிக்கவா? உறுப்பினர் அட்டை உள்ளதா?”  என்று குற்றம் சுமத்தப்பட்ட தமுமுகவினர் சோதனை செய்து நடுவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். இதையே காரணம் காட்டி பொது விசாரணையை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விடலாம். பழியை மற்றவர்களின் மீது போடலாம் என்று சதி ஆலோசனை செய்து இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இவர்களிடம் நேர்மையான கணக்கு இல்லை என்பது விசாரணைக்கு முன்பே உறுதியாக நிரூபணமாகி விட்டது. நடுவர்களை எந்த அளவு அவமானப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி விட்டு அவர்களை அழைத்து வா பார்க்கலாம் என்று முண்டா தட்டுவது தான் பொது விசாரணையை ஏற்கும் இலட்சணமா?
நடுவர்கள் தான் நமக்கு நிபந்தனைகள் போட வேண்டுமே தவிர நடுவர்களையே சோதனை நடத்துவோம் என்பது அறை கூவலை ஏற்க மறுத்து ஓட்டம் பிடிப்பது தானே தவிர அறைகூவலை ஏற்பது அல்ல.
எதை ஏற்க முடியாதோ எதை ஏற்பது நியாமில்லையோ நடுவர்கள் எதை ஏற்க மறுப்பார்களோ அதையே நிபந்தனையாகப் போடுவது ஓடி ஒளியும் தந்திரம் என்பதை யாரும் விளங்கலாம்.
நீதிபதிகளாகச் செயலாற்றவுள்ள அந்தத் தலைவர்களுக்கு பத்தாம் தேதி வசதிப்படுமா? வேறு அலுவல்கள் உள்ளனவா? அவர்களுக்கு வசதியான நாள் எது? எந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்நாங்களே ஒரு இடத்தைத் தேர்வு செய்யலாமா?” என்று ஆறு இயக்கங்களின் தலைவர்களிடம் சம்மதம் பெற்று அறிவித்திருந்தால் கூட ஓரளவுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள் என்று கருதிக் கொள்ளலாம்.
பிரச்சனைக்குரிய மூன்று கணக்குகளையும் நடுவர்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களின் சுதந்திரமான விசாரணைக்கு தமுமுக தயாராக இல்லை”  என்பது தான்சவாலை ஏற்கிறோம்என்ற பிரசுரத்தின் சாரம்சமாகும்.
முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கு
முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கையும் ஒப்படைக்க வேண்டும் என்று அக்குழுவிடம் முறையிடுவோம் என்று கூறியுள்ளனர். நன்றாக முறையிடட்டும்.
நாம் பிரிந்த பின்னர் தனித்தனியாக திரட்டிய நிதி பற்றிதான் நாம் விசாரணை கோரினோம். நாம் இணைந்திருந்த போது நடந்தவை பற்றியும் அவர்கள் விசாரணை கோரினால் நாமும் அதுபோல் கோரிக்கை வைப்போம்.
சம்பந்தமில்லாத சங்கதிகள்
* நான் அபுஜஹலை விட மோசமானவன் என்றும், கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல் என்றும் தமுமுகவிலிருந்து பிரிந்தபோது மிரட்டினர்.
* ஊருக்கு ஊர் கர்பலா யுத்தம் நடத்துவேன் என கர்ஜித்தார்.
* தமுமுகவினர் மீது ஜிஹாது (போர்) நடத்துங்கள் என்று ஜும்ஆ உரையில் பகிரங்கமாக கூறினார்.
* தமுமுக தலைமைக் கழகத்தில் ரவுடிகளை நுழைத்து தலைமை நிர்வாகிகள் மீது மிகப் பெரியதொரு கொலைவெறித் தாக்குதலை நடத்த முயற்சித்தார்.
* தமுமுகவினருக்கு எதிராக ஏராளமான பொய்களையும், பழிகளையும் அள்ளி வீசினார். இவரின் சூழ்ச்சிகளையெல்லாம் வல்ல அல்லாஹ் முறியடித்தான்.
இவை நாம் பொது விசாரணைக்கு அழைப்பு விட்டிருக்கும் பிரச்சனையுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவை. முற்றிலும் பொய்யான கற்பனை.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் பற்றியும், உண்மை பேசுவோம் என்ற தலைப்பில் தமுமுக தலைமை வெளியிட்ட குறுந்தகட்டில் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பொதுமக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் செய்யத் தயாரா? என்று ஏராளமான தடவை வற்புறுத்தி விட்டோம். அதை ஏற்க மறுப்பதம் மூலம் இக்குற்றச்சாட்டுகளிலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டதாலும், அவர்கள் செய்த வன்முறைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதாலும் இதை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.
ஜகாத் பற்றி
அடுத்து ஜகாத் பற்றிய நமது நிலைப்பாட்டைப் பற்றியும் குறிப்பிட்டு மக்களைத் திசை திருப்ப முயன்றுள்ளனர்.
ஜகாத் பற்றிய நமது கருத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் கூறி வருகிறோம். அவர்கள் நம்மோடு இணைந்திருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக வாய் திறக்கவில்லை. எதிர்த்ததில்லை. தங்களோடு சேர்ந்திருக்கும் வரை சரியாகத் தெரிந்த ஒரு விஷயம் பிரிந்த பின்னர் தவறாகத் தெரிகிறது என்றால் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அந்தப் பிரச்சனை பற்றியும் நட்பு முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து நாங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபித்தால் அதை ஏற்கத் தயார் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த அழைப்பு இன்றளவும் உயிருடன் உள்ளதால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் அதற்கு நாம் அளிக்கும் பதில்.
15 ரூபாய் மதிப்பில் ஜகாத் நூல்
அடுத்து ஏழு ரூபாய் மதிப்புடைய ஏகத்துவம் இதழில் வெளியான ஜகாத் பற்றிய ஆய்வை 15 ரூபாய் மதிப்பில் நூலாக பீ.ஜே வெளியிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதுவும் எடுத்துக் கொண்ட பிரச்சனையுடன் தொடர்பில்லாதது.
ஏகத்துவம் மாத இதழின் பேப்பர் வேறு! புத்தகத்தின் பேப்பர் வேறு!
இரண்டின் முகப்பு அட்டைகளும் வேறு!
இந்த மாதம் எவ்வளவு விற்பனையாகுமோ அந்த அளவிற்கு மாத்திரம் ஏகத்துவம் அச்சிடப்படும். புத்தகங்கள் ஆண்டுக்கணக்கில் பாதுகாத்து விற்கப்படும். வாடகை, ஊதியம் உள்ளிட்ட செலவுகள் இதற்காக ஆகும் என்பதால் மாத இதழுக்கும், புத்தகங்களுக்கும் விலை வித்தியாசம் இருக்கும். ஆறு ரூபாய்க்குக் கிடைக்கும் குமுதம் இதழ் அதே அளவு பக்கங்களில் புத்தக வடிவம் பெறும் போது 30 ரூபாய்க்கு விற்கப்படுவது இதனால்தான்.
தமுமுகவின் தலைவர் முகஸ்துதி பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். 96 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் விலை 25. ஆனால், அதே நீள, அகலத்தில் 280 பக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற நூலின் விலை 50 ரூபாய் தான்.
கொள்ளை லாபம் வைத்து புத்தக விலை நிர்ணயம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும் ஜவாஹிருல்லா இப்படி புலம்பியிருப்பது தான் ஆச்சரியம்.
அவர் முகஸ்துதி பற்றி புத்தகம் வெளியிட்டு ஓராண்டுக்குப் பின்தான் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வெளியிட்டோம். ஒரு ஆண்டில் காகிதத்தின் விலை அதிகரித்திருந்தும் 280 பக்கங்களுக்கு நாம் நிர்ணயித்தது, 50 ரூபாய் தான். அந்தக் கணக்கின்படி அவர் 16 ரூபாய் தான் தனது புத்தகத்துக்கு விலை நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
ஒரு சந்தேகமும் விளக்கமும்
மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி என்பரை முபாஹலாவுக்கோ, விவாதத்துக்கோ ஒப்பந்தம் செய்ய அழைத்து நீங்கள் தானே மண்டபத்தையும், நாளையும் முடிவு செய்தீர்கள். அதுபோல் தான் இதுவும் என்று சிலர் விவரம் புரியாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கும் நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
* அது, பழ்லுல் இலாஹி, ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருதரப்பு மட்டுமே சம்பந்தப்பட்ட விவகாரம்.
நம் இருவரையும் மூன்றாவது தரப்பு விசாரிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நிலை.
அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் இரண்டு தரப்புக்கும் இல்லை. நடுவருக்கே உள்ளது என்ற நிலையில் இரண்டு தரப்பில் யாரும் முடிவு எடுக்க முடியாது.
நடுவர் நியமிக்கப்படாத விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருவர் முடிவு எடுக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
அந்த நிலையில் கூட ஒருதலைப் பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவிப்பதற்கு ஏற்றத் தக்க ஏராளமான காரணங்கள் இருக்க வேண்டும். பழ்லுல் இலாஹியைப் பொருத்தவரை ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தன.
நமக்கு எதிராக பழ்லுல் இலாஹி, தொடர்ந்து அவதூறுப் பிரசுரங்களை வெளியிட்டு வந்தார். அவரை நேரடி விவாதத்துக்கு தொலைபேசி மூலம் துபை சென்ற போது அழைத்தோம். அவர் ஏற்க மறுத்தார். எனவே தான் ஒருதலைப்பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவித்தோம்.
வேறு சில இயக்கங்களுடன் விவாத ஒப்பந்தம் செய்வதற்கான நாளையும், இடத்தையும் நாமே அறிவித்துள்ளோம். மேற்கண்ட அந்த இயக்கங்கள் நீங்களே இடத்தையும் நாளையும் முடிவு செய்யுங்கள் என்று நமது பொறுப்பில் விட்டதன் அடிப்படையில் அவ்வாறு முடிவு செய்துள்ளோம்.
இடத்தையும், நாளையும் முடிவு செய்யுங்கள் என்று நாம் பொறுப்பு ஒப்படைக்காத நிலையில், நாமே அழைப்பு விட்டுள்ள நிலையில், நடுவர்கள் முன்னிலையில் வாதிகளாகவும், பிரதிவாதிகளாகவும் தமுமுக நிற்க வேண்டிய நிலையில் தன்னிச்சையாக நாளையும், இடத்தையும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது பின்வாங்கி ஓடுவதற்கான தந்திரம் தவிர வேறில்லை.
பதிவுத்தபால்
நாம் வெளியிட்ட பகிரங்க அறைகூவலைப் பதிவுத் தபால் மூலம் தமுமுக தலைமையின் அலுவலக முகவரிக்கு அனுப்பினோம். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைக் சீட்டும் நமக்கு கிடைத்துவிட்டது.
ஆனால், தமுமுக தலைமை நமது முகவரிக்கு நேரடியாக தங்கள் நிலைபாட்டைத் தெரிவிக்கும் வகையில் தபால் எதுவும் இன்றுவரை வரவில்லை.
முகவரி இல்லை
நமது பகிரங்க அழைப்பில் கையெழுத்து இல்லை என்றும் துண்டுப் பிரசுரத்தில் அச்சகத்தின் பெயர் இல்லை என்றும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால், அவர்களின் அறிக்கையிலும் கையெழுத்து இல்லை. அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலும் அச்சகத்தின் பெயர் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் தமுமுக என்று நாம் கூறி வருவதற்கு மற்றொரு சான்று இது.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 4 மற்றும் 21 )
நாம் பொது விசாரணைக்கு அழைத்தால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் எப்படியெல்லாம் சம்மந்தமில்லாமல் உளறியுள்ளனர் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எப்படியும் இந்தப் பொது விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்ற விபரத்தையும் உணர்வு இதழில் நாம் வெளியிட்டோம். அந்த அறிவிப்பு இது தான்:
இறைவனின் திருப்பெயரால்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாஅத் செய்த முன்முயற்சிகள்
விசாரணைக் குழுவாக இருந்து எங்கள் கணக்குகளைச் சரிபார்த்து சமுதாயத்துக்கு அறிவியுங்கள் என்று முன்வரக் கடமைப்பட்ட தமுமுக பின்வாங்கிக் கொண்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொது செயலாளர் எஸ்.எம். பாக்கர்,
மாநிலச் செயலாளர்கள் கோவை ஜாபர்,
எம்.. முஹம்மது முனீர்
ஆகியோர் கொண்ட குழு
முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும்,
தேசிய லீக் தலைவர் கோனிகா எம். பஷீர் அஹமது அவர்களையும்,
ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் நஸீர், துணைத் தலைவர் ரஹீம் மற்றும் சிக்கந்தர் ஆகியோரையும்,
மனித நீதிப் பாசறையின் தலைவர் குலாம் முஹம்மது அவர்களையும்,
இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகத்தின் சார்பில் . முஹம்மது கான் பாகவி அவர்களையும்
சந்தித்தனர்.
ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மதுரையில் இருந்ததால் அவர்களை நேரில் சந்திக்க இயலவில்லை. கடிதம் மூலம் அழைப்பு விடப்பட்டது. ஏழைகள் சம்பந்தப்பட்ட நிதி விவாகரத்தில் நீங்கள் தலையிட்டு விசாரித்து நீதி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைவருமே தமுமுக அழைப்பு விடுத்த இடத்துக்கு தாங்கள் வருவது நியாயமற்றது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். நடுவர்கள் தானே அந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.
நடுவார்களாகிய நீங்கள் அழைக்கும் நாளில், அழைக்கும் இடத்துக்கு நாங்கள் வருகிறோம். மூன்று கணக்குகள் பற்றி முழு விபரங்களையும் தருகிறோம். தேவையான எல்லா ஒத்துழைப்பையும் வழங்குகிறோம் என்று தெரிவித்தோம்.
அப்படியானால் தாங்கள் அனைவரும் கூடி திங்கட்கிழமை அன்று முடிவை அறிவிப்பதாகக் கூறினார்கள். அதன்படி அவர்களின் முடிவுகளை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 2)
இதுவரை கூறப்பட்ட விபரங்களில் இருந்து தமுமுகவினர் சுனாமிப் பணத்தைச் சுருட்டியுள்ளனர் என்பது உறுதியாகிறது. இதை விட வலிமையான ஆதாரங்களுடன் இவர்களின் சுனாமித்திருட்டு எப்படி நிரூபிக்கப்பட்டது என்பதை அடுத்த தொடரில் தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு- தொடர் 2

முதல் தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சுனாமி மற்றும் ஃபித்ரா வசூல் தொடர்பாக பொது விசாரணைக்குத் தயார் என்று நாம் அறைகூவல் விட்ட போது அதை தமுமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடக்கும் போது நடுவர்களாக நாம் குறிப்பிட்ட ஆறு இயக்கத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லர். மாறாக தமுமுகவுக்குத் தான் நெருக்கமாக இருந்தனர். தமுமுகவோடு ஒரே மேடையில் பல ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் இவர்களுக்கு நெருக்கமான உறவு கிடையாது. மாறாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக அனைவரும் கூடி ஒரு முடிவு எடுக்கும் போதெல்லாம் இந்த ஆறு இயக்கத்தினரும் கலந்து கொண்டதுண்டு.
இன்றைக்கும் கூட அது தான் நிலைமை. அப்படி இருந்தும் நம்மிடம் எந்த தில்லுமுல்லுகளும், ஒளிவு மறைவும் இல்லாததால் நாம் இவர்களை நடுவர்களாக ஏற்றுக் கொண்டோம். ஆனால் தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ராவிலும் மோசடி செய்த காரணத்தால் அவர்கள் விசாரணைக்கு உடன்படவில்லை என்பதை மேற்கண்ட விபரங்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதன் பின்னர் சில சகோதரர்கள் இது போல் நாம் சவால் விட்டதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக நாம் விமர்சனம் செய்வதாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து உணர்வு ஏட்டிலும் ஒரு சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வியும் அதற்கு நாம் அளித்த பதிலும் வருமாறு:

கேள்வி :  நமக்கிடையே உள்ள பிரச்சனைகளைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது சரிதானா?
தி. அப்துல் மாலிக், திருச்சி.
பதில் : ஃபித்ரா, சுனாமி நிவாரண நிதி பற்றி நாம் வெளியிட்ட பிரசுரத்தின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
ஃபித்ரா என்பது இரண்டு இயக்கங்களுக்கிடையே உள்ள பிரச்சனை அல்ல. அது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும். ஏழைகள் சம்பந்தப்பட்ட பொருளாதராரப் பிரச்சனையாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் தான் கொடுத்த ஃபித்ரா தொகை ஏழைகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் இயக்கங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கிறான். அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடைந்ததா என்பதைக் கண்காணிக்கும் கடமை எங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்டு.
அங்கே இவ்வளவு கொடுத்தோம். இங்கே இவ்வளவு கொடுத்தோம் என்று செய்திகள் வெளியிடுவது போதுமானதல்ல. எந்தக் கணக்காக இருந்தாலும் வரவு என்ன? எந்த வகையில் வந்தது என்பதை விபரமாக வெளியிட வேண்டும். அப்படி வந்த வரவு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்ற செலவையும் வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைமைக்கு வந்து சேர்ந்தது எவ்வளவு என்ற விபரப் பட்டியலையும் வெளியிட்டோம்.
அவை எந்தெந்த ஊர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற செலவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.
இது போல் ஃபித்ரா திரட்டிய மற்ற இயக்கங்களும் தாங்கள் திரட்டிய தொகை எவ்வளவு? அவை முழுமையாக விநியோகம் செய்யப்பட்டதா என்ற கணக்கை வெளியிடச் சொல்வது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதுபோல் சுனாமிப் பேரழிவின் போது உள்ளம் உருகிய மக்கள் வாரி வாரி வழங்கினார்கள். தாங்கள் வழங்கிய ஒவ்வொரு பைசாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தாருக்குக் கூட பணம் அனுப்பாமல் ஒரு மாத ஊதியத்தை வழங்கியவர்களும் இருந்தனர்.
சுனாமி நிதி திரட்டியவர்கள் வரவுகளை மட்டும் பட்டியல் போட்டு வெளியிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய விபரத்தை வெளியிடவில்லை.
அதாவது பித்ராவில் வரவு விஷயம் வெளியிடப்படவில்லை.
சுனாமியில் செலவு விபரம் வெளியிடப்படவில்லை.
இதை வற்புறுத்துவது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதைத் தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இதை வெளியிடாதவரை நமது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
( உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 15 )
சுனாமி மற்றும் ஃபித்ராவில் தமுமுக ஊழல் செய்து விட்டது; அதை நாங்கள் நடுவர்கள் முன்னிலையில் நிரூபிப்போம் என்று நாம் விட்ட அறைகூவல் இன்றைக்கு தமுமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் புதுசுகளுக்கு தெரியாது. ஆனால் தமுமுகவுக்காக அன்றைக்கு உழைத்த பல உண்மையான சகோதரர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்தார்கள் என்பதையும் அப்போதைய உணர்வில் நாம் வெளியிட்டோம்.
அந்த வகையில் நாம் வெளியிட்ட ஒரு கடிதத்தைப் பாருங்கள்!
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
தமுமுக தலைமை நிர்வாகிகள் பொது விசாரணைக்கு தாங்கள் தயராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சில தந்திரங்களைக் கையாண்டு அதன் மூலம் தங்களை நம்புகின்ற மக்களைத் தக்க வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
நேர்மையையும் நியாயங்களையும் விரும்புகின்றவர்கள் நிச்சயம் இந்தத் தந்திரங்களையும் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
நேர்மையை விட இயக்க வெறியை மட்டுமே பார்ப்பவர்கள் மட்டும் தான் மிஞ்சுவார்கள் என்பதற்கு சேலம் மாநகர தமுமுக செயலாளர் டி.முஹம்மது ஹுஸைன் எழுதிய மடலை ஒரு சோற்றுப் பதமாக வெளியிடுகிறோம்.
தமுமுக ஊழல் இயக்கமா?
1995 களில் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்ட போது தமிழக முஸ்லிம்களில் மிகக் குறைவானவர்கள் இவ்வியக்கத்தை ஏற்றுக் கொண்டனர். காரணம் தமுமுக மீது சுமத்தப்பட்ட தீவிரவாத முத்திரையும், “நஜாத் இயக்கம்என்கிற ஏளனமுமே! ஆனால் இறைவனின் கருணையினால் இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் “தமுமுகஉருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்த இயக்கம் கடந்து வந்த பாதை, தனித்தன்மை பணிகள், அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாத துணிவு, தன்னரிகல்லா எளிமையான தலைவர்கள், இவை அனைத்திற்கும் மேல் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்கிற தூய எண்ணம்.
தமுமுகவின் ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும் இந்த உணர்வு உள்ளதாலேயே எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு சமுதாய பணிகள் செய்து வருகிறோம்.
மற்ற இயக்கங்களை விட தமுமுகவினுடைய தனித்தன்மைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்து தான் நாம் மக்களைச் சந்திக்கிறோம். சமுதாய மக்கள் இதன் காரணமாகவே நம் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய பொருளாதாரத்தைக் கொடுக்கின்றனர். ஒன்றுபட்ட தமுமுகவாக இருந்த போது ஒரு புறம் ஏகத்துவ பிரச்சாரப் பணிகளையும் மறுபுறம் சமுதாயப் பணிகளையும் செய்து வந்துள்ளோம். இடையில் சகோ. பி.ஜே உள்ளிட்ட சில சகோதரர்கள் தமுமுகவை விட்டு விலகிய பின்பும், சமுதாய நலன் கருதி தமுமுகவில் நிலைத்து இருந்துள்ளோம். இவையெல்லாம் தமுமுக தலைமை நிர்வாகிகள் மீது நாம் கொண்ட நம்பிக்கையே!
ஆனால் இன்றைக்கு பிரிந்த சகோதரர் பி.ஜே அவர்கள் தமுமுக மீது எழுப்பியுள்ள “ஊழல் குற்றச்சாட்டுகள்சாதாரணமானது அல்ல. பி.ஜே, மற்ற அமைப்புகள் மீது தொடுக்கும் விமர்சனங்களும், தமுமு மீது கூறியுள்ள குற்றச்சாட்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இன்றைக்கும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தமுமுகவைப் பற்றி மக்களிடம் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். என்னவெனில், “கோவை கலவரத்தில் நடந்த காட்சிகளை வீடியோ தொகுப்பாகத் திரட்டி சுருட்டி விட்டனர்என்று பேசி வருகின்றனர். இவை நமக்கு ஒன்றும் பொருட்டல்ல….
ஆனால் சகோதரர் பி.ஜேவைப் பொறுத்த வரை பதில் கூற வேண்டிய பொறுப்பு நிச்யமாக நமக்கு (தமுமுக தலைமைக்கு) உண்டு. காரணம் பி.ஜே நம்மில் இருந்து விலகிச் சென்றவர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு நம் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு இச்செய்தி வெறும் வாய்க்கு அவல்ஆகி உள்ளது.
தமுமுகவினுடைய ஆரம்பகால தொண்டனாகவும், சேலம் மாவட்டத்தில் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து நிர்வாகத்தில் இருந்து வருகின்ற நான் தற்போது மாநகர செயலாளர் ஆக இருக்கும் என்னுடைய ஓர் வேண்டுகோள் :
தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு :
தமுமுகவினருக்கு பகிரங்க அறைகூவலை விடுத்த சகோ. பி.ஜே அவர்களுக்கு “இறைவனின் துணைக் கொண்டு சவாலை ஏற்கிறோம்என்று அறிவித்த மாநில நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் தமுமுக  மாநில தமைமை எதிர் தரப்பாரிடம்….
ஒன்றரை மணிநேரம் காத்திருப்போம், 2 மணி நேரம் காத்திருப்போம் வந்து விட வேண்டும் என்பதும்….
சகோ. பி.ஜே விற்கு பதில் கூறத் தேவையில்லை. ஆனால் முதலும் இது தான் கடைசியும் இது தான் என்பதும்…
நடுநிலையான பொது நபர்கள்அடங்கிய குழுவை சகோ. பி.ஜே தான் ஏற்படுத்த வேண்டும் என்பதும்….
தமுமுகவினர் நழுவிச் செல்கிறார்களோ! என்பதாக அமைந்துள்ளது.
மாறாக….
சகோ. பி.ஜேயின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதில் நாம் உறுதியோடு இருப்பின் அதை பட்டவர்த்தமாக வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத் வேண்டும். இதற்காக ஓரிரு நாட்கள் ஆனாலும் கவலைப்பட தேவையில்லை.
பொது நபர்கள்அடங்கிய குழுவை அமர்த்துவதற்கு சகோ. பி.ஜேயை விட நமக்கு அதிக ஆர்வம் ஏற்பட வேண்டும். நமக்கு விடப்பட்ட சவாலை எதிர் கொள்ள வேண்டும்.
இனி ஒரு முறை சகோ. பி.ஜே. தமுமுவைப் பற்றி விமர்சனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் செய்ய இதுவே தருணமாகும்.
tntj மாநில தலைவர் சகோ. பி.ஜே அவர்களுக்கு :
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மீது உண்மையான கவலை இருந்து தவறான ஓர் இயக்கத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று கருதி தாங்கள் தமுமுக மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை கூறி இருப்பின் அதற்கான ஆதாரத்துடன் தாங்கள், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சாமான்ய தொண்டனும் புரியும் விதத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தமுமுக ஊழல் இயக்கம் தான் என்பதை நிரூபித்தால் நிச்சயமாக தமுமுக வளர்க்கப் பாடுபட்ட நாம் தமுமுகவை புறந்தள்ள தாமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தமுமுக தொண்டனும் tntj தொண்டனும் இந்த விசயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வரும் வேளையில் உங்களிடம் உண்மை இல்லை என்று தெரிய வந்தால் “தூய இஸ்லத்தைப் பற்றி பேசவோ, சமுதாய மக்கள் பற்றி பேசவோ செய்கிற தகுதியை அறவே இழக்கிறீர்கள்என்பதை கவனத்தில் கொள்வீராக!
தமுமுகவினருக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே நடைபெறும் “இப்பனிப் போர்முற்றுப் பெறவேண்டும். சமுதாயப் பணிகள் செய்யக் கூடிய நாம் ஒவ்வொரு சமுதாய மக்களின் வீட்டுப் படியேறி சென்று சமுதாய பணிகளுக்கு நிதியைத் திரட்டுகிறோம். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு மாநில நிர்வாகிகளை விட நம்மை (என்னைப் ) போன்றவர்களுக்கு அதிகமாக உள்ளதாகக் கருதுகிறோம்.
இறுதியாக….
மேற்கண்ட விவகாரத்தின் உண்மை நிலை தெரியும் வரை…. சேலம் மக்களின் தமுமுக செயலாளராக பொறுப்பில் இருக்கும் நான் என்னுடைய உள்ளார்ந்த முடிவின்படி இன்றைய தினத்திலிருந்து “செயலாளர்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். “இராஜினாமாசெய்கிறேன். இன்ஷா அல்லாஹ்…
தமுமுக தலைமையின் தூய்மை வெளிப்படுமாயின் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினராக பணியாற்ற கடடைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறúன்.
அன்புடன்
டி.முஹம்மது ஹுஸைன்
“(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 22)
தமுமுகவின் கடந்த கால செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டு பொறுப்பும் வகித்தவருக்கே தமுமுக செய்யும் கள்ளத்தனமும் பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்ததும் புரிந்து போனதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி வெளிநாடுகளில் தமுமுகவுக்காக நிதி திரட்டி வழங்கிய சகோதரர்கள் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளானார்கள்? தமுமுக மோசடி செய்தது எந்த அளவுக்கு அவர்களைப் பாதித்தது என்பதை ஒரு தமுமுக பொறுப்பாளரான மார்க்க அறிஞரின் கடிதம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அந்தக் கடிதம் இதோ:


இதில் இருந்து பொது விசாரணைக்கு தமுமுகவினர் முன்வராமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அலட்சியமாக நடந்து கொண்டது தமுமுக வில் உள்ள நன்மக்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வரலாறூகள் தெரியாத சில சில்லறைகள் நம்மைப் பார்த்து சுனாமி கணக்கு குறித்து கேள்வி கேட்கின்றனர், அனைத்து கேள்விகளுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டு விசாரணைக்கு தயார் என்று நாம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அழைத்த போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்த தமுமுகவினர், இன்றைக்கு சில சில்லறைகளைக் கிளப்பி விட்டுள்ளனர். அனைத்துக்கும் தக்க பதில் அளிக்கப்பட்டு விட்டது. இனியும் அளிக்கப்படும் என்பதை உறுதி படக் கூறிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பொருளாதார மோசடி தொடர்பாக என்னைப் பற்றியோ நான் பொறுப்பில் இருந்த, இருக்கும் ஜமாஅத் பற்றியோ எவனும் எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
நடுவர் குழுவினர் பொது விசாரணைக்கு அழைப்பு விட்ட போது அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் பொருளாதார விஷயத்தில் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்தக் கடிதம் இதோ:


தன் பின்னர் நடுவர்கள் அழைத்த விசாரணையில் தமுமுக கலந்து கொண்டார்களா? நடுவர்கள் எடுத்த முடிவு என்ன?

சுனாமி மற்றும் ஃபித்ரா வசூல் தொடர்பாக பொது விசாரணைக்குத் தயார் என்று நாம் அறைகூவல் விட்ட போது அதை தமுமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடக்கும் போது நடுவர்களாக நாம் குறிப்பிட்ட ஆறு இயக்கத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லர். மாறாக தமுமுகவுக்குத் தான் நெருக்கமாக இருந்தனர். தமுமுகவோடு ஒரே மேடையில் பல ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் இவர்களுக்கு நெருக்கமான உறவு கிடையாது. மாறாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக அனைவரும் கூடி ஒரு முடிவு எடுக்கும் போதெல்லாம் இந்த ஆறு இயக்கத்தினரும் கலந்து கொண்டதுண்டு.
இன்றைக்கும் கூட அது தான் நிலைமை. அப்படி இருந்தும் நம்மிடம் எந்த தில்லுமுல்லுகளும், ஒளிவு மறைவும் இல்லாததால் நாம் இவர்களை நடுவர்களாக ஏற்றுக் கொண்டோம். ஆனால் தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ராவிலும் மோசடி செய்த காரணத்தால் அவர்கள் விசாரணைக்கு உடன்படவில்லை என்பதை மேற்கண்ட விபரங்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதன் பின்னர் சில சகோதரர்கள் இது போல் நாம் சவால் விட்டதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக நாம் விமர்சனம் செய்வதாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து உணர்வு ஏட்டிலும் ஒரு சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வியும் அதற்கு நாம் அளித்த பதிலும் வருமாறு:

கேள்வி :  நமக்கிடையே உள்ள பிரச்சனைகளைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது சரிதானா?
தி. அப்துல் மாலிக்திருச்சி.
பதில் : ஃபித்ராசுனாமி நிவாரண நிதி பற்றி நாம் வெளியிட்ட பிரசுரத்தின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
ஃபித்ரா என்பது இரண்டு இயக்கங்களுக்கிடையே உள்ள பிரச்சனை அல்ல. அது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும். ஏழைகள் சம்பந்தப்பட்ட பொருளாதராரப் பிரச்சனையாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் தான் கொடுத்த ஃபித்ரா தொகை ஏழைகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் இயக்கங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கிறான். அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடைந்ததா என்பதைக் கண்காணிக்கும் கடமை எங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்டு.
அங்கே இவ்வளவு கொடுத்தோம். இங்கே இவ்வளவு கொடுத்தோம் என்று செய்திகள் வெளியிடுவது போதுமானதல்ல. எந்தக் கணக்காக இருந்தாலும் வரவு என்னஎந்த வகையில் வந்தது என்பதை விபரமாக வெளியிட வேண்டும். அப்படி வந்த வரவு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்ற செலவையும் வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைமைக்கு வந்து சேர்ந்தது எவ்வளவு என்ற விபரப் பட்டியலையும் வெளியிட்டோம்.
அவை எந்தெந்த ஊர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற செலவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.
இது போல் ஃபித்ரா திரட்டிய மற்ற இயக்கங்களும் தாங்கள் திரட்டிய தொகை எவ்வளவு?அவை முழுமையாக விநியோகம் செய்யப்பட்டதா என்ற கணக்கை வெளியிடச் சொல்வது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதுபோல் சுனாமிப் பேரழிவின் போது உள்ளம் உருகிய மக்கள் வாரி வாரி வழங்கினார்கள். தாங்கள் வழங்கிய ஒவ்வொரு பைசாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தாருக்குக் கூட பணம் அனுப்பாமல் ஒரு மாத ஊதியத்தை வழங்கியவர்களும் இருந்தனர்.
சுனாமி நிதி திரட்டியவர்கள் வரவுகளை மட்டும் பட்டியல் போட்டு வெளியிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய விபரத்தை வெளியிடவில்லை.
அதாவது பித்ராவில் வரவு விஷயம் வெளியிடப்படவில்லை.
சுனாமியில் செலவு விபரம் வெளியிடப்படவில்லை.
இதை வற்புறுத்துவது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதைத் தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இதை வெளியிடாதவரை நமது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 15 )
சுனாமி மற்றும் ஃபித்ராவில் தமுமுக ஊழல் செய்து விட்டது; அதை நாங்கள் நடுவர்கள் முன்னிலையில் நிரூபிப்போம் என்று நாம் விட்ட அறைகூவல் இன்றைக்கு தமுமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் புதுசுகளுக்கு தெரியாது. ஆனால் தமுமுகவுக்காக அன்றைக்கு உழைத்த பல உண்மையான சகோதரர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்தார்கள் என்பதையும் அப்போதைய உணர்வில் நாம் வெளியிட்டோம்.
அந்த வகையில் நாம் வெளியிட்ட ஒரு கடிதத்தைப் பாருங்கள்!
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
தமுமுக தலைமை நிர்வாகிகள் பொது விசாரணைக்கு தாங்கள் தயராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சில தந்திரங்களைக் கையாண்டு அதன் மூலம் தங்களை நம்புகின்ற மக்களைத் தக்க வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
நேர்மையையும் நியாயங்களையும் விரும்புகின்றவர்கள் நிச்சயம் இந்தத் தந்திரங்களையும் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
நேர்மையை விட இயக்க வெறியை மட்டுமே பார்ப்பவர்கள் மட்டும் தான் மிஞ்சுவார்கள் என்பதற்கு சேலம் மாநகர தமுமுக செயலாளர் டி.முஹம்மது ஹுஸைன் எழுதிய மடலை ஒரு சோற்றுப் பதமாக வெளியிடுகிறோம்.
தமுமுக ஊழல் இயக்கமா?
1995 களில் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்ட போது தமிழக முஸ்லிம்களில் மிகக் குறைவானவர்கள் இவ்வியக்கத்தை ஏற்றுக் கொண்டனர். காரணம் தமுமுக மீது சுமத்தப்பட்ட தீவிரவாத முத்திரையும், “நஜாத் இயக்கம்” என்கிற ஏளனமுமே! ஆனால் இறைவனின் கருணையினால் இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் “தமுமுக” உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்த இயக்கம் கடந்து வந்த பாதைதனித்தன்மை பணிகள்அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாத துணிவுதன்னரிகல்லா எளிமையான தலைவர்கள்இவை அனைத்திற்கும் மேல் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்கிற தூய எண்ணம்.
தமுமுகவின் ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும் இந்த உணர்வு உள்ளதாலேயே எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு சமுதாய பணிகள் செய்து வருகிறோம்.
மற்ற இயக்கங்களை விட தமுமுகவினுடைய தனித்தன்மைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்து தான் நாம் மக்களைச் சந்திக்கிறோம். சமுதாய மக்கள் இதன் காரணமாகவே நம் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய பொருளாதாரத்தைக் கொடுக்கின்றனர். ஒன்றுபட்ட தமுமுகவாக இருந்த போது ஒரு புறம் ஏகத்துவ பிரச்சாரப் பணிகளையும் மறுபுறம் சமுதாயப் பணிகளையும் செய்து வந்துள்ளோம். இடையில் சகோ. பி.ஜே உள்ளிட்ட சில சகோதரர்கள் தமுமுகவை விட்டு விலகிய பின்பும்சமுதாய நலன் கருதி தமுமுகவில் நிலைத்து இருந்துள்ளோம். இவையெல்லாம் தமுமுக தலைமை நிர்வாகிகள் மீது நாம் கொண்ட நம்பிக்கையே!
ஆனால் இன்றைக்கு பிரிந்த சகோதரர் பி.ஜே அவர்கள் தமுமுக மீது எழுப்பியுள்ள “ஊழல் குற்றச்சாட்டுகள்” சாதாரணமானது அல்ல. பி.ஜேமற்ற அமைப்புகள் மீது தொடுக்கும் விமர்சனங்களும்தமுமு மீது கூறியுள்ள குற்றச்சாட்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இன்றைக்கும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தமுமுகவைப் பற்றி மக்களிடம் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். என்னவெனில், “கோவை கலவரத்தில் நடந்த காட்சிகளை வீடியோ தொகுப்பாகத் திரட்டி சுருட்டி விட்டனர்” என்று பேசி வருகின்றனர். இவை நமக்கு ஒன்றும் பொருட்டல்ல….
ஆனால் சகோதரர் பி.ஜேவைப் பொறுத்த வரை பதில் கூற வேண்டிய பொறுப்பு நிச்யமாக நமக்கு (தமுமுக தலைமைக்கு) உண்டு. காரணம் பி.ஜே நம்மில் இருந்து விலகிச் சென்றவர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு நம் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு இச்செய்தி வெறும் வாய்க்கு அவல்” ஆகி உள்ளது.
தமுமுகவினுடைய ஆரம்பகால தொண்டனாகவும்சேலம் மாவட்டத்தில் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து நிர்வாகத்தில் இருந்து வருகின்ற நான் தற்போது மாநகர செயலாளர் ஆக இருக்கும் என்னுடைய ஓர் வேண்டுகோள் :
தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு :
தமுமுகவினருக்கு பகிரங்க அறைகூவலை விடுத்த சகோ. பி.ஜே அவர்களுக்கு “இறைவனின் துணைக் கொண்டு சவாலை ஏற்கிறோம்” என்று அறிவித்த மாநில நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் தமுமுக  மாநில தமைமை எதிர் தரப்பாரிடம்….
ஒன்றரை மணிநேரம் காத்திருப்போம், 2 மணி நேரம் காத்திருப்போம் வந்து விட வேண்டும் என்பதும்….
சகோ. பி.ஜே விற்கு பதில் கூறத் தேவையில்லை. ஆனால் முதலும் இது தான் கடைசியும் இது தான் என்பதும்…
நடுநிலையான பொது நபர்கள்” அடங்கிய குழுவை சகோ. பி.ஜே தான் ஏற்படுத்த வேண்டும் என்பதும்….
தமுமுகவினர் நழுவிச் செல்கிறார்களோ! என்பதாக அமைந்துள்ளது.
மாறாக….
சகோ. பி.ஜேயின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதில் நாம் உறுதியோடு இருப்பின் அதை பட்டவர்த்தமாக வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத் வேண்டும். இதற்காக ஓரிரு நாட்கள் ஆனாலும் கவலைப்பட தேவையில்லை.
பொது நபர்கள்” அடங்கிய குழுவை அமர்த்துவதற்கு சகோ. பி.ஜேயை விட நமக்கு அதிக ஆர்வம் ஏற்பட வேண்டும். நமக்கு விடப்பட்ட சவாலை எதிர் கொள்ள வேண்டும்.
இனி ஒரு முறை சகோ. பி.ஜே. தமுமுவைப் பற்றி விமர்சனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் செய்ய இதுவே தருணமாகும்.
tntj மாநில தலைவர் சகோ. பி.ஜே அவர்களுக்கு :
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மீது உண்மையான கவலை இருந்து தவறான ஓர் இயக்கத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று கருதி தாங்கள் தமுமுக மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை கூறி இருப்பின் அதற்கான ஆதாரத்துடன் தாங்கள்எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சாமான்ய தொண்டனும் புரியும் விதத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தமுமுக ஊழல் இயக்கம் தான் என்பதை நிரூபித்தால் நிச்சயமாக தமுமுக வளர்க்கப் பாடுபட்ட நாம் தமுமுகவை புறந்தள்ள தாமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தமுமுக தொண்டனும் tntj தொண்டனும் இந்த விசயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வரும் வேளையில் உங்களிடம் உண்மை இல்லை என்று தெரியவந்தால் “தூய இஸ்லத்தைப் பற்றி பேசவோசமுதாய மக்கள் பற்றி பேசவோ செய்கிற தகுதியை அறவே இழக்கிறீர்கள்” என்பதை கவனத்தில் கொள்வீராக!
தமுமுகவினருக்கும்தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே நடைபெறும் “இப்பனிப் போர்” முற்றுப் பெறவேண்டும். சமுதாயப் பணிகள் செய்யக் கூடிய நாம் ஒவ்வொரு சமுதாய மக்களின் வீட்டுப் படியேறி சென்று சமுதாய பணிகளுக்கு நிதியைத்திரட்டுகிறோம். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு மாநில நிர்வாகிகளை விட நம்மை (என்னைப் ) போன்றவர்களுக்கு அதிகமாக உள்ளதாகக் கருதுகிறோம்.
இறுதியாக….
மேற்கண்ட விவகாரத்தின் உண்மை நிலை தெரியும் வரை…. சேலம் மக்களின் தமுமுக செயலாளராக பொறுப்பில் இருக்கும் நான் என்னுடைய உள்ளார்ந்த முடிவின்படி இன்றைய தினத்திலிருந்து “செயலாளர்” பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். “இராஜினாமா” செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்…
தமுமுக தலைமையின் தூய்மை வெளிப்படுமாயின் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினராக பணியாற்ற கடடைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறúன்.
அன்புடன்
டி.முஹம்மது ஹுஸைன்
“(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 22)
தமுமுகவின் கடந்த கால செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டு பொறுப்பும் வகித்தவருக்கே தமுமுக செய்யும் கள்ளத்தனமும் பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்ததும் புரிந்து போனதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி வெளிநாடுகளில் தமுமுகவுக்காக நிதி திரட்டி வழங்கிய சகோதரர்கள் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளானார்கள்? தமுமுக மோசடி செய்தது எந்த அளவுக்கு அவர்களைப் பாதித்தது என்பதை ஒரு தமுமுக பொறுப்பாளரான மார்க்க அறிஞரின் கடிதம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அந்தக் கடிதம் இதோ:


இதில் இருந்து பொது விசாரணைக்கு தமுமுகவினர் முன்வராமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அலட்சியமாக நடந்து கொண்டது தமுமுக வில் உள்ள நன்மக்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வரலாறூகள் தெரியாத சில சில்லறைகள் நம்மைப் பார்த்து சுனாமி கணக்கு குறித்து கேள்வி கேட்கின்றனர், அனைத்து கேள்விகளுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டு விசாரணைக்கு தயார் என்று நாம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அழைத்த போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்த தமுமுகவினர், இன்றைக்கு சில சில்லறைகளைக் கிளப்பி விட்டுள்ளனர். அனைத்துக்கும் தக்க பதில் அளிக்கப்பட்டு விட்டது. இனியும் அளிக்கப்படும் என்பதை உறுதி படக் கூறிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பொருளாதார மோசடி தொடர்பாக என்னைப் பற்றியோ நான் பொறுப்பில் இருந்த, இருக்கும் ஜமாஅத் பற்றியோ எவனும் எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
நடுவர் குழுவினர் பொது விசாரணைக்கு அழைப்பு விட்ட போது அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் பொருளாதார விஷயத்தில் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அந்தக் கடிதம் இதோ:


தன் பின்னர் நடுவர்கள் அழைத்த விசாரணையில் தமுமுக கலந்து கொண்டார்களா? நடுவர்கள் எடுத்த முடிவு என்ன?
தொடரும் இன்ஷா அல்லாஹ்….,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக