அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

ஞாயிறு, 29 மே, 2011

வேலூரில் பொய்யன் ஜமாத் செய்த வசூல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்


பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்:
பொதுமக்களின் நம்பிக்கையையும் நாணயத்தையும் பெற்று மக்களின் ஆதரவுடன் இறைவனின் பேரருளுடனும் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாலியல் மற்றும் பணமோசடி காரணமாக குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு இங்கிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள் சும்மா இருக்க முடியாமல் தங்கள் மோசடிகளை தொடர்ந்து செய்வதற்காக மட்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் ஜமாத்தாக பதிவுசெய்யாமல் டிரஸ்டியாக பதிவு செய்து கேட்பவர்களிடமெல்லாம் நாங்களும் தவ்ஹீத் ஜமாத் தான் என்று சொல்லி வெளிநாடுகளில் பித்ரா காசுகளை சுருட்டியது இந்தக்கூட்டம்.
ததஜவினர் இரத்த தானம் செய்யும் இடங்களில் தங்களின் நோட்டீஸூகளைக் கொடுத்து நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தது. இதனால் பல ஊர்களிலும், வெளி நாடுகளிலும் இருந்து இவர்கள் மீது புகார்கள் வரவே இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயர் பதிவு செய்யப்படாமல் இருக்கவே அந்தப் பெயர் சங்கமாக பதிவு செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
நாங்கள் தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாத் என சொல்லி வந்த இந்த பொய்யர்கள் கூட்டத்திற்கு எதிராக இனி அவர்கள் யாரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான செய்தி.
வழக்கின் காரணமாக மக்களுக்கு உண்மை தெரிந்து போனதும், இனி நாங்கள் இந்திய முஸ்லிம் தவ்ஹீத் ஜமாத் என்று செயல்படுவோம் என்று சொன்னார்கள். அதை சில நாட்கள் அமுல்படுத்தினார்கள். ஆனால் அதன்மூலம் தங்களுக்கு பைசா பேராது எனத் தெரிந்தும் அதை நைசாக மாற்றிக் கொண்டு மீண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் பழையபடி இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.
ஆனால் டிரஸ்டியாக பதிவு செய்துவிட்டு கள்ளத்தனமாக சங்க பைலாவை வைத்து காலத்தைக் கடத்தி வந்தார்கள் இவர்கள். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட பிறகு தங்களிடம் இருந்த கள்ள பைலாவை நைசாக தூக்கி விட்டார்கள். இன்றுவரை கள்ளத்தனமான இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு பைலா இல்லை. தேவைப்படுபவர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.
தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி பல மோசடிகளை செய்துவந்த இந்தக் கள்ளக்கூட்டம், சமீபத்தில் வேலூரில் செய்த ஒரு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூரில் நடந்த இந்த மோசடி சம்பந்தமாக 3 மாதங்களுக்கு முன்பே நமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் வசூல் செய்தது தான் மோசடி மற்றபடி அவர்களின் நோக்கம் நல்லதாக இருக்கும், எனவே கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம் என நமது செய்தியாளர்கள் குழு காத்திருக்க ஆரம்பித்தது.
அதாவது இவர்களின் மோசடியின் சாராம்சத்தை கீழ்க்கண்ட நோட்டீஸில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது வக்ப் நில மீட்பு என்பது தான்
இவர்களின் நோக்கம்.

இதற்காக அவர்கள் அடித்த நன்கொடை ரசீது இது தான்.
இந்த ரசீதைப் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் 1000 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் ஜரூராக நடந்து முடிந்தது. நாம் கேட்பதெல்லாம் வேலூரில் துவங்கிய இந்த வக்ப் நில மீட்புக் குழு இப்போது எங்கே இருக்கிறது? அப்படி ஒரு குழு இருக்கிறதா இல்லையா? இந்த மோசடி தலைமையில் இருந்து துவங்கியது உறுதியாகிறது. எனவே இந்த மோசடி வேலூரில் மட்டும் நடந்ததா? அல்லது குவைத் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நடந்ததா? நாம் 3 மாதம் காத்திருந்தது இவர்கள் அந்த வக்ப் நில மீட்பு குழு சம்பந்தமாக ஏதாவது செய்திகள் வெளியிடுவார்கள் என்று தான். ஆனால் இன்று வரை இப்படி ஒரு குழு இருப்பதாக தகவலே இல்லை,
அப்படியானால் மக்களிடம் செய்த வசூல் பணம் எவ்வளவு? அது எங்கே? என எந்தக் கேள்விகளுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
இவர்களின் கள்ளத்தனம் குறித்து அன்றைக்கே காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வக்ப் சொத்து மீட்புக்குழு சம்பந்தமாக எந்தவிதத் தகவலும் இல்லை. இதுபோன்ற பலமோசடிகளை பள்ளிவாசல் பெயரில் இவர்கள் அறங்கேற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை.
ஆக இதன் மூலம் நாம் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் இவர்கள் செய்யும் கள்ள மோசடி வேலைகளுக்கு இஸ்லாம், பள்ளிவாசல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள் என்பது தான் நிதர்சனம். மக்களே! தாங்கள் தான் நியாயவான்கள் என்பது போல இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படுங்கள். இனி இவர்கள் எதற்காவது காசு கேட்டால் உடனடியாக அவர்களைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அது மட்டுமின்றி இந்த வேலூர் விவகாரம் சம்பந்தமாக அவர்களிடம் கேள்வி கேளுங்கள்.
இன்னும் பதில்வராத கேள்விகள்:
1) காரைக்குடி விவகாரத்தில் நாங்கள் தான் யோக்கியர்கள் என வரிந்து கட்டியவர்கள் அதற்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை.
2) அட்சய திருதியை சம்பந்தமாக தலையங்கம் எழுதியவர்கள், பாத்திமா ஜூவல்லர்ஸூக்கு அட்சய திருதியை சம்பந்தமாக விளம்பரம் கொடுத்தது சரியா எனக் கேட்டோம். அதற்கும் பதில் இல்லை.
3) பித்னாக்களின் தலைவன் செங்கி எழுதிய கடிதம் சம்பந்தமாக இன்றுவரை பதில் இல்லை
4) KNTJ உதயம் என தலைப்புச்செய்தி போட்டவர்கள் அது சம்பந்தமாக வாய்திறக்கவில்லை
5) அதிமுக பதவியேற்பு விழாவிற்கு தங்களுக்கு அழைப்பிதழ் வந்தது என்று சொன்னார்கள். நாம் அதெல்லாம் பொய் என நிறுபித்த பிறகு, அழைப்பு தொலைபேசியில் வந்தது என்று சொன்னார்கள். ஆனால் தொலைப்பேசியில் யாருக்கும் அழைப்பு வராது என ஆதாரத்தோடு கேள்வி கேட்டோம். அதற்கும் பதில் இல்லை.
6) உணர்வு பத்திரிகையில் இருந்து காப்பியடித்த செய்தியைப் போட்டோம். அதற்கும் பதில் இல்லை.
7) இப்போது வேலூர் மோசடி சம்பந்தமாக செய்தி தந்திருக்கிறோம். இதற்கும் பதில் வேண்டும்.
எனவே மக்களே! தயவுசெய்து இதற்கெல்லாம் என்ன பதில் என கேளுங்கள்

தலையங்கம் எழுதும் தருதலைகள் 2

பத்திரிகை நடத்துபவர்கள் ஒன்று சொல் புத்தியில் நடத்த வேண்டும், அல்லது சுய புத்தியிலாவது நடத்த வேண்டும். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் காப்பி அடிப்பதையே பிழைப்பாகக் கொண்டு காலம் தள்ளினால் அது மாட்டி விடப்படும் போது அதை விடக்கேவலமாக எதுவுமே இருக்காது என்ற நிலைக்கு வந்து விடும். தினமலரின் வந்த ஒரு காப்புரிமை பெற்ற செய்தியை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி காப்பி அடித்து அதை தங்களுடைய தலையங்கத்தில் விட்டுருக்கிறது இந்த பொய்யன் கூட்டம். பொய்யன் ரிப்போர்ட் என்ற பெயரைக்கூட சொந்தமாக வைக்கத் துப்பில்லாமல் அதையும் காப்பி அடித்து போட, உண்மையான இதழ்காரர் இவர்கள் மீது வழக்கு மிரட்டல் விடுக்க அப்பறம் அது சமுதாய பொய்யன் ரிப்போர்ட் என மாறிப்போனது. இப்போது பாருங்கள் தினமலரில் இருந்து அடித்த அட்டுக்காப்பியை.

இதைவிடக் கேவலமான ஒரு செய்தி. இவர்கள் சொந்தமாக எழுத துப்பில்லாமல், தினமலர் மற்றும் ஏனைய பேப்பர்களில் இருந்து காப்பியடித்துப் போடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் ததஜவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான உணர்வில் இருந்தே காப்பியடித்துப் போட்ட செய்தி தெரியுமா? காத்திருங்கள் ஆதாரத்துடன் பொய்யன் போலி முகமூடியைக் கிழிக்கும் செய்தி அடுத்து..

செவ்வாய், 24 மே, 2011

கோவையில் SDPI கட்சியினர் தொடர்ந்து அத்துமீறல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 08.05.2011 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.சத்திய பாதையில் லட்சிய பயணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் மாணவரணியின் கல்வி வழிகாட்டி போஸ்டர்கள் மீது, விடியல் வெள்ளி  போஸ்டர்களை SDPI அரசியல் கட்சியினர் ஒட்டினர்.
மேலும் இந்த வாரம் நம் சமுதாய வார இதழான உணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்ட பல்வேறு இடங்களில் தங்களது விடியல் வெள்ளி போஸ்டரை ஒட்டி தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர் SDPI அரசியல் கட்சியினர்..
நடந்து முடிந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் குறைந்தது 10,000 ஓட்டுகள் பெறுவார்கள் என்பது பொது மக்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் அரசியல் கட்சி ஏவிய கூலிப்படையாக செயல்பட்டு TNTJவினர் மீது கோவையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியதன் விளைவாக 40,000 திற்கும் அதிகமான  முஸ்லிம்கள் ஓட்டு உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் வெறும் 4519 ஓட்டுகள் மட்டுமே SDPI அரசியல் கட்சியினரால் பெற முடிந்தது.
தொடர்ந்து இது போன்ற செயல்களில் SDPI கட்சியினர் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய காலங்களில் ஒட்டுமொத்தமாக மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.



புதன், 18 மே, 2011

பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது ஏன்?


ஏம்பா ரீல் விடுறதுக்கு ஒரு அளவு இல்லையா? இப்படி ஒரேயடியா அள்ளிவிட்டு ஏம்பா மாட்டிக்கிறீக!

உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டு இருக்கும் பொய்யன் சமாத் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்ததாக செய்தி போட்டு இருந்தார்கள். நாம் அதற்கான ஆதாரங்களை வெளியிட முடியுமா? என்று கேட்டு இருந்தோம். ஆதாரம் என்றால் அவர்கள் அனுப்பிய் அழைப்பிதழையாவது வெளியிட வேண்டும் எனக் கேட்டு இருந்தோம். உடனே தன் சாயம் வெளுப்பதை உணர்ந்தபொய்யன் சமாத் நைசாக ஜகா வாங்கியதை அனைத்து மக்களும் அறிவார்கள். அவர்கள் இரண்டாவதாக வெளியிட்ட செய்தி.

ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அஇஅதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கரை தொடர்பு கொண்டு அழைப்பிதழை பெற்றுக் கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில், குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த நர மோடி கலந்து கொள்வதால் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்பதை நேரடியாக தெரிவித்து விட்டார் எஸ்.எம். பாக்கர்.
ஆக முந்தைய செய்தியில் அழைப்பிதழ் கிடைத்தும் அதைப் புறக்கணித்தோம் என சொல்லி தன்னை பெரிய கம்பெனியாக காட்டிக் கொண்ட பொய்யன் சமாத் இப்போது மேற்கண்ட செய்தியை போட்டு ஜகா வாங்கியதை மக்கள் அறிந்து கொள்ளட்டும்.
அடுத்து பதவியேற்பு விழாவைப் பொருத்தவரை யாரும் யாருக்கும் போன் போட்டுக் கூப்பிட மாட்டார்கள். நேரிலும் அழைக்க மாட்டார்கள். நீ வந்த வா! வரலைன்னா தொலைஞ்சி போ என்ற ரீதியில் அழைப்பிதழ் மட்டும் அனுப்புவார்கள். அது என்ன காது குத்து விழாவா? கலந்து கொண்டு மொய் செஞ்சிட்டுப் போங்க என்று சொல்வதற்கு. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் கூட அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்பது தான் நியதி. அது தான் நடந்தது. வைகோவிற்கும் கூட அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் நம் பொய்யன் தலைவரிடம் போன் போட்டு கெஞ்சியது போல யாரும் அவரிடம் போன் போட்டு கெஞ்சவில்லை.
ஆனால் பொய்யன் சமாத்து தலைவரிடம் மட்டும் போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் போன் போட்டு கெஞ்சினாராம். நீங்கள் கலந்து கொள்ளாவிட்டால் விழாவே நடக்காது, நீங்கள் வந்தே ஆகனும் என அழுகாத குறையாக சொன்னாராம்.இப்படி வேண்டுமானால் நடத்திருக்கலாம். அதாவது விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்புங்கள் என பொய்யன் சமாத் சார்பாக பூங்குன்றனிடம் கேட்டு இருக்கலாம். அதற்கு அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளும் இயக்கத்திற்கு குறைந்தது 24 பேராவது உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாது என சொல்லி இருக்கலாம்.
நேற்று வரைக்கும் அழைப்பிதழ் வந்தது அதைப் புறக்கணித்தோம் என்றார் பொய்யன் சமாத்து தலைவர். இன்றைக்கு அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளுமாறு போன் போட்டு வலியுறுத்தினார் என்று சொல்கிறார். நாளைக்கு,,... இல்ல விழாவுக்கு கூப்பிடுற மாதிரி கணவு கண்டேன் என சொன்னாலும் சொல்லுவார் போலும்.
கேக்குறவன் கேணப்பயலா இருந்தா KPN பஸ்ல தான் பாக்கரண்ணே கோயில்பட்டிக்கு போனார்னு சொன்னாலும் சொல்லுவீக போலிருக்கு.
ஏன் உனக்கு இந்த வேல?

திங்கள், 16 மே, 2011

இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்


அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.
அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!
தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. இந்த பொய்யர்கள் இவர்களுக்கென்று வந்த அழைப்பிதழை வெளியிட்டு விட்டு நாங்கள் புறக்கணித்தோம் என்று செய்தி போட்டால் நன்றாக இருக்கும். எங்கே போடச்சொல்லுங்க பார்ப்போம்?
இன்னும் பதில்வராத கேள்விகள்:
· அட்சய திருதியை முட்டாள் தனமானது என தலையங்கள் எழுதிய இவர்கள்,, பொய்யன் சமாத்தின் தலைவர் பாக்கர் அதிகபட்ச பங்குதாரராக இருக்கும் பாத்திமா ஜூவல்லர்ஸுக்கு அட்சய திருதியை விளம்பரம் போட்டது உண்டா இல்லையா?
· இனி பொய்யன் சமாத்தில் நீடிக்க முடியாது என பாக்கரைத் தாக்கி கடிதம் எழுதிய செங்கியின் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே!

செவ்வாய், 10 மே, 2011

மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணர்வு பத்திரிகையில் ஜாக் சம்பந்தமான ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருக்கும் ஜாக் கிளையில் இருந்து காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி, பள்ளிவாசல் கட்டுவதற்கு பணம் கேட்டு மாட்டிக்கொண்ட விசயம் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் சில பகுதிகளில் ஜாக் சார்பாக உணர்வு மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக மிகக் கீழ்த்தரமான வாசகங்களை கொண்டு நோட்டீஸ்கள் வெளியாகின. சில பகுதிகளில் உணர்வு பத்திரிகையை விற்காதே! என கடைக்காரர்கள் மிரட்டப்பட்டார்கள். இந்தச் செய்தி வெளியாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர் ஜாக் சகோதரர்கள்.
ஒரு சில இடங்களில் ஜாக் வெளியிட்டிருந்த நோட்டீஸ்களில் பாம்பனில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, தவ்ஹீத் ஜமாஅத் எங்கள் மீது அபாண்டம் சுமத்துகிறது என்றும், கோவையில் வெளியிடப்பட்டிருந்த நோட்டீஸில் மட்டும், அந்த சம்பவம் உண்மைதான், ஆனால் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி காசு கேட்கவில்லை; ஜாக், தங்களுடைய பெயரில் தான் ராமச்சந்திர ராமவன்னியைத் தொடர்பு கொண்டார்கள்., அவர் மாற்று மத சகோதரர் என்பதால் தான் ஜாக்கிற்கும், தவ்ஹீத் ஜமாத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என சொல்லி இருந்தார்கள்.
இவர்களால் தமிழகத்தின் சில பகுதிகளில் உணர்வுக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ்களில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த ஒரு விசயம், அரசியலில் அன்றைக்கு என்ன நிலைப்பாடு இருந்ததோ, அதே நிலைப்பாடு தான் இன்றைக்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். அதாவது அரசியலை சார்ந்திருப்பதே ஷிர்க், அரசியல் என்பது நாற்றமெடுக்கும் சாக்கடை, நாங்களெல்லாம் வாசமடிக்கும் பூக்கடை என பக்கம் பக்கமாக அவர்களின் இதழ்களில் எழுதிவந்த அவர்களின் நிலைப்பாடுகள், இன்றைக்கும் அப்படியே இருக்கின்றன என்பது தான் அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்களில் குறிப்பிட்டிருந்த செய்தியின் சாராம்சம்..
அரசியல் இருக்கட்டும் . முதலில் கொள்கையில் சரியாக இருக்கிறதா ஜாக்? ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்பது தான் இவர்கள் இயக்கத்தின் விரிவாக்கம். அதாவது குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருந்த ஜாக், இப்போது சகாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மாறிவிட்டது. அதாவது ஜாக், இப்போது ஜாக்ஸ் ஆக மாறிவிட்டது. கொள்கையில் ஜாக்ஸ் ஆக மாறிவிட்ட ஜாக், அரசியல் நிலைப்பாட்டில், காலிலிருந்து கழற்றிப்போட்ட நாற்றமெடுத்த சாக்ஸ் ஆக மாறிப்போயிருக்கிறது.
அரசியலே எங்களுக்கு ஆகாது, அது ஷிர்க் என்று சொல்லிக்கொள்ளும் ஜாக்ஸ் இயக்கத்தினர், மேலப்பாளையத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? 2006 ஆம் மேலப்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளராக மைதீன்கான் நிறுத்தப்படுகிறார். ஆனால் அரசியலே இணைவைப்பு என்று சொன்ன ஜாக்ஸ் கூட்டத்தினர், அவரை எதிர்த்து, அவர்களின் பிரதான அபிமானியான பசுலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என, நடுரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டு பித்தலாட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.


2006 ஆம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த நேரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிமுகவை ஆதரித்தது. இந்த நிலையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் ஜூமுஆ உரை நிகழ்த்திய ஜாக்ஸ்சின் துணை தலைவர் செய்யது அலி பைஜி, டிஎன்டிஜேவை மிக மோசமாக விமர்சனம் செய்தார். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர், கொடி பிடிக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பின்னால் செல்கிறார்கள், தவ்ஹீதை விட்டு விட்டு ஷிர்க்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். நம் ஜாக் அமைப்பினர் இது போன்ற எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது, பிரச்சாரம் செய்யக்கூடாது, அரசியல் என்ற நவீன இணைவைப்பிலிருந்தும், இதுபோன்ற வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார்.
அந்த ஜூமுஆவில் கலந்து கொண்ட டிஎன்டிஜே சகோதரர் ஒருவர், ஜூமுஆ முடிந்த பின் அவரிடம், மேலப்பாளையத்தில் திமுக வேட்டபாளராக பஸ்லுல் இலாஹியை நிறுத்தக் கோரி ஜாக்ஸ் நடத்திய போராட்டத்தின் பத்திரிகை செய்தியை அவரிடம் காண்பித்து, அரசியலே ஷிர்க் என்று சொல்கிறீர்களே! அப்படியானால் இது என்ன? என்று கேட்க, அதற்கு எவ்விதமான பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் செய்யது அலி. டிஎன்டிஜே, ஆதரவு பிரச்சாரம் மட்டும் தான் செய்யும், ஆனால் ஜாக்ஸினர் அரசியலில் போட்டியிட தங்கள் அபிமானியையே வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று போராட்டமே நடத்துகின்றர்.
டிஎன்டிஜே, அரசியலை ஷிர்க் என்று சொல்லவில்லை, ஆனால் இன்றைய சூழ்நிலையில் அரசியலில் போட்டியிட்டால் நம் ஈமானைப் பறிகொடுத்து, ஏகத்துவத்தைப் பலி கொடுத்து விட்டுத்தான் களம் காணமுடியும் என்று தான் இன்றுவரை சொல்கிறது. ஆனால் அரசியலை ஷிர்க் என்று சொல்லும் ஜாக்ஸ் அமைப்பினர் படுகேவலமான செயல்களில் இறங்கிய ஆதாரங்களை படங்களில் காணலாம். மேலப்பாளையத்தில் ஒரு பேச்சு, மேட்டுப்பாளையத்தில் ஒரு பேச்சு, திருச்சிக்கு ஒரு நிலைப்பாடு, திருநெல்வேலிக்கு ஒரு நிலைப்பாடு, புதுப்பேட்டைக்கு ஒரு கொள்கை, புதுக்கோட்டைக்கு ஒரு கொள்கை என தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பும் கொள்கையை வைத்திருப்பவர்கள் யார் என்று மக்களே புரிந்து கொள்ளட்டும்.
மாற்று மதத்தவரை ஆதரிப்பது ஹராம் என்று சொல்லக்கூடிய இந்த உத்தம இயக்கத்தின் மாநில செயலாளர் கோவை அய்யூப், கடையநல்லூரில் தமுமுகவுடன் சேர்ந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கொடுமையும் இதே தமிழகத்தில் தான் நடந்தது. இவ்வளவு கேவலமான நிலைப்பாடுகளை ஊருக்கு ஊர் வைத்திருக்கும் இந்த ஜாக்ஸ் அமைப்பினர் டிஎன்டிஜேவின் அரசியல் நிலைப்பாடுகளை இழிவுபடுத்துவதாக நினைத்து அவர்களே இழிவுபட்டு நிற்கின்றனர்.
திருட்டு வசூல் முயற்சி நடந்த பாம்பன் கிளையில் இருந்து புயல் கிளம்பும் என்று எதிர்பார்த்தால் , புதுமடம் தவிர்த்து மற்ற பகுதிகளில் தான் இந்த விவகாரம் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பாம்பன் ஜாக்ஸ் கிளையின் நிர்வாகி ஹபிபுல்லா தான் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமவன்னியிடம் காசு கேட்டவர். கொள்கையையே இடத்திற்கு ஒன்றாகச் சொல்லக்கூடியவர்கள், இந்த பாம்பன் சம்பவத்தையும் இரண்டு விதமாகத்தான் சொல்கிறார்கள். இது போன்று ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள்., ஆனால் மறுபக்கம், ஜாக்ஸ் நிர்வாகி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியைத் தொடர்பு கொண்டு ஜாக்ஸ் பெயரில் தான் பணம் கேட்டார் என்றும் சொல்லிவருகிறார்கள். சரி அப்படியே ஜாக்ஸ் பெயரைப் பயன்படுத்தி, அசன் அலியிடம் பணம் கேட்பது மட்டும் என்ன நியாயம்? அரசியல் ஷிர்க் என்று பிரச்சாரம் செய்பவர்கள், அந்த அரசியல்வாதிகளிடம் பிச்சையெடுப்பது மட்டும் சரியான செயலா? இவர்கள் நடந்து முடிந்தத் தேர்தலில் இராமநாதபுரம் பகுதியில், ஜூமுஆ மேடைகளில் ஜவாஹிருல்லாவை ஆதரித்தும், டிஎன்டிஜேவை கடும் சொற்களைப் பயன்படுத்தி எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார்களா, இல்லையா?
டிஎன்டிஜேவுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதென்பது இவர்களின் சாதரண நடைமுறையே! 2006 தேர்தலில் அதிமுகவை டிஎன்டிஜே ஆதரிப்பதால் அதற்கு எதிராக முடிவெடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கடையநல்லூரில் ஜாக்ஸின் மாநிலச் செயலாளர் கோவை அய்யூப் பிரச்சாரம் செய்தார்.
டிஎன்டிஜே எடுக்கும் மார்க்க முடிவுகளுக்கே, அதற்கு எதிரான முடிவை எடுக்கும் இவர்கள் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் மாற்றாமலா இருப்பார்கள்? ரமலான் காலங்களில் சஹர் நேரத் துவக்கத்திற்கு ஒரு பாங்கு உண்டு என்று ஹதீஸின் அடிப்படையில் டிஎன்டிஜே அறிவிக்கிறது. அதற்கு எதிராக இவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ரசூலுல்லாஹ் காலத்தில் அலாரம் என்ற கடிகாரம் கிடையாது, அதனால் தான் அவர்கள் அன்றைக்கு சஹர் பாங்கு சொன்னார்கள் என்று சொல்லி, நபிவழியையே கேவலப்படுத்திய இவர்கள், டிஎன்டிஜேவுக்கு எதிராக இன்றைக்கு எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளால் இவர்கள் தான் கேவலப்பட்டு நிற்கின்றார்கள்.
இன்னும் இவர்களின் கொள்கைகள் கொடிகட்டிப்பறக்கும் விசயங்களாக, குமரி மாவட்டத்தில் ராஜீவ்காந்திக்கு சிலை வைக்கப் போராடிய ஜாக்கின் நிர்வாகி மலுக்கு முதலி, மதுரை தெற்குவாசலில் நடந்த முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் கந்தூரி திருவிழாவிற்கு திருவுளச்சீட்டு எழுதிக் கொடுக்க, நிர்வாகக்கமிட்டியில் நியமிக்கப் பட்ட ஜாக்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மேலத்தெரு அப்துல் கபூர் (எ) சிரீன், கீழத்தெரு இஸ்மாயில் என ஏகப்பட்ட பட்டியல்கள் நீளும். ஆனால் இதுவே போதுமென்று நினைக்கிறோம். ஜாக்ஸ் அமைப்பினர் தங்களின் கீழ்த்தரமான வேலைகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு தங்களுக்கு தாங்களே சேதாரங்களை உண்டாக்கிக் கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடுகள், பொதுக்கூட்டங்கள், வாத பிரதிவாதங்கள், பேச்சுகள், எழுத்துக்கள் என அனைத்துமே வெளிப்படையானது. ரகசியமானது எதுவும் இல்லை. ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தலைமையின் சட்டையைப் பிடித்து உலுக்கக்கூடிய சிந்திக்கும் மக்களைக் கொண்ட இயக்கம். ஒரு சாதாரணத் தொண்டர் சுட்டிக்காட்டும் தவறை, அவர் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் திருத்திக் கொள்ளும் இயக்கம். தவறு செய்பவர் தலைவராக இருந்தாலும் சரி பொதுச்செயலாளராக இருந்தாலும் சரி அவரைத்தூக்கி எறியும் ஒரு மக்களின் இயக்கம்.
இதர்கு எடுத்துக்காட்டு கடந்த காலத்தில் பொறுப்பு வகித்த பொய்யர்களைத் தூக்கி எறிந்த்து தான். கொள்கை ரீதியாக பலரால் எதிர்க்கப்பட்டாலும் மற்ற முடிவுகளில் மக்களை வென்றெடுக்கும் இயக்கம். எவ்வளவு கூட்டம் வந்தாலும் தலைக்கணம் கொள்ளாத இயக்கம்.
இறைவனின் மாபெரும் கிருபையால் அவனது தூதர் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்துவச் சுடரை மட்டுமே ஏந்திவரும் இயக்கம். தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே இயக்கம். தலைவராக இருந்தாலும் அவர் தலைமைத் தொண்டன் என வைத்திருக்கும் இயக்கம் .
ஏகத்துவம் கொஞ்சம் சருக்கினாலும், பெரிய மக்கள் கூட்டம் தேவையில்லை, கொஞ்சமாக கொள்கைக் கூட்டமே போதும் என உடைத்து வெளியேறும் இயக்கம். எல்லா புகழும் ஏகத்துவத்தின் எஜமானனுக்கே என எழுச்சிக் குரல் கொடுக்கும் இயக்கம். எந்த நேரத்திலும் தன் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காயும் இயக்கம் இதுவல்ல! ஏழைமக்களிடம் வசூல் செய்து ஏசிக் கார்களில் பவனி வரும் இயக்கம் இதுவல்ல! எனவே தேவையில்லாமல் சீண்டிப்பார்க்க வேண்டாம்.

KNTJ உதயம் – ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கிறார் செங்கி


டையநல்லூரில் பள்ளிவாசலை தனி நபர் பெயரில் சைபுல்லா ஹாஜா அவர்கள், பசீர் என்ற ஒரு தனி நபரின் பெயரில் பதிவு செய்தார். வழக்கமாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் காசுகளில் பொதுமக்களையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என்ற நிலைபாடு காரணமாக அதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்யும் போது அது அந்தப் பகுதி தவ்ஹீத் சகோதரர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. தவ்ஹீத் சகோதரர்களைப் பொருத்தவரை யார் தொழ வந்தாலும் (வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயக்கங்கள் நடத்தும் சில சைத்தான்களைக் கூட தடுக்க மாட்டார்கள்) அவர்களைத் தடுக்க மாட்டார்கள். ஆக பொதுமக்களிடம் வசூல் செய்த நிதி பொதுமக்களின் நலனுக்குப் போக வேண்டும் என்ற நோக்கில் தான் தனி நபர் டிரஸ்டில் பதிவு செய்யக்கூடாது என கொள்கையில் இருக்கிறது ததஜ.
இது சம்பந்தமாக விசாரணைகளும் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. சைபுல்லா ஹாஜா அவர்கள் எழுதும் கடிதங்களுக்கு சகோ.பிஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் லட்டர் பேடில் தன் கையெழுத்திட்டு, முத்திரை வைத்து கடிதங்கள் அனுப்பியதாக கடையநல்லூர் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் செங்கி அவர்களின் தளத்தில் சைபுல்லா ஹாஜா எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அது உண்மை தான்., ஆனால் பிஜே தரப்பு பதில் என்று ஒரு பெரிய செய்தியைப் போட்டிருக்கிறார் செங்கி.
பிஜே தரப்பு பதில் என்றால்,, அது ஏன் லட்டர் பேடில் வரவில்லை., அதில் ஏன் பிஜே கையெழுத்திடவில்லை என ஏகப்பட்ட கேள்விகள் சின்னப் பிள்ளைகள் கூட கேட்பார்கள். அப்படியானால் அவர் தளத்தில் சைபுல்லா ஹாஜா அவர்களின் மச்சானுக்கு எழிதியதாக வந்துள்ள செய்தி பொய்யானதா?.. இல்லை... அது உண்மை தான். காரணம், அந்த செய்தி ஈமெயில் மூலமாக சிலருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அப்படி சிலருக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் பொய்யன் வகையறாக்களுக்கு எப்படி அந்த மெயில் கிடைத்தது? சைபுல்லா ஹாஜா எழுதிய கடிதம் அவரே கூட பொய்யனுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் சைபுல்லா ஹாஜாவுக்கு ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் கடிதம் எழுதியிருந்தால் அது எப்படி பொய்யன் வகையறாக்களுக்கு கிடைக்கும்?
அது மட்டுமின்றி குவைத்தில் செய்யப்பட்ட வசூல் மட்டும் மிகத் தெளிவாக அதிலே இடம்பெறுகிறதென்றால் இது முழுக்க முழுக்க பொய்யன் வகையறாவின் ஆலோசனையோடு சின்ன மன்மதன் ஐஸ்குச்சி அப்பாஸூ அவர்கள் செய்த இருக்கலாம் என்று கருதுகிறோம் ஆதாரம் இருக்கா? அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தரத் தயாரா என்று கேட்பார்கள். இது அனுமானம் தான். ஆதாரமான செய்தி இல்லை. இதை அப்பாஸூ தான் எழுதினாரா என்பது தெளிவில்லாத செய்தி. ஆனால் இது செங்கியின் வகையில் இருந்து தான் புறப்பட்டு இருக்கிறது என்பது தெளிவான செய்தி,.
எவனோ பொறம்போக்குகள், மொல்ல மாரிகள் , இயக்கத்தில் கலகத்தை உண்டாக்குவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு இயக்கம் நடத்துபவர்கள் எழுதும் கடிந்தங்களுக்கு பிஜே தரப்பு பதில் என்று எழுதுவது எப்படி சரியாகும்? இதைப் பிழைப்பாகக் கொண்டுள்ள செங்கி இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற சிண்டு முடியும் தொழிலைச் செய்வதற்கு பதிலாக, பேசாமல் செங்கி அவர்கள், தன்னுடைய “பழைய தொழிலான” ....... அதாவது லாட்ஜ் நடத்தும் தொழிலையே பார்க்கலாம்.
போனஸ் விசயமாக செங்கி அவர்களை பொய்யன் டிஜே விலிருந்து வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு சமீபத்தில் பொய்யன் சமாத்தில் சிலருடன் சேர்ந்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. அதைக் கண்டித்து செங்கி அவர்கள் பொய்யன் வகையறாக்களின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக எழுதியிந்த கடிதம் நமக்கும் கிடைத்தது. இணைப்பைப் பார்க்கவும்







யார் மன நோயாளி ?

வாசகர் உணர்வு பகுதியில் இருந்து....

சென்ற வார மக்கள் உரிமையில் தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்தி ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருந்த கடிதம் படித்தேன். அதிலே ஜவாஹிருல்லா அவர்கள் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைப் பற்றி எழுதி வரும் போது பிஜெ சாயப் அவர்களைப் பற்றி மனநோயாளி என்றும் அவர் எப்போதுமே தமுமுகவுக்கு எதிராகத் தான் முடிவெடுப்பார் என்றும் எழுதியிருந்தார்.
நடந்து முடிந்த தேர்தலிலே நீங்கள் எங்கள் தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டீர்கள். தமுமுகவை ஆதரித்தும் எதிர்த்தும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் களமிறங்கினார்கள். வழக்கம் போல பிஜெ சாயப் இந்த தடவையும் தமுமுகவுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார். அவர் தமுமுகவுக்கு எதிரான நிலைபாடு எடுத்ததுமே அவர் மீது நாங்கள் கோபப்பட்டோம்.
பிஜெ சாயப் அவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமுமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் தன் சொந்த பகையை வைத்துக் கொண்டு எதிர்க்கிறாரே! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல பிஜெ சாயப்பின் பிரச்சாரம் இருக்கிறதே இது நம் சமுதாய ஒற்றுமையை பாதிக்குமே என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தமுமுகவினரின் நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்த போது தான், அவர் எடுத்த நிலைபாடு மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தேன். பிஜெ சாயப்பிற்கும் எங்களுக்கும் மார்க்க விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நிலைபாட்டில் அவரின் ஜமாத் மட்டும் தான் சமுதாய நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கட்சியை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல இலகுவாக அறிந்து கொண்டோம். ஆனாலும் தமுமுகதான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்பதை பல ஆண்டுகள் நம்பிவந்த நான், என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எங்கள் பகுதி மக்களுக்கும் மற்றும் என் நண்பர்கள் வட்டாரத்திலும் தமுமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லிவந்தேன். எதுவரை தெரியுமா?
ஜவாஹிருல்லா சாயப் என்றைக்கு விடுதலைப் புலிகளின் தமிழக தலைவன் சீமானை ராமநாதபுரத்துக்குள் அழைத்து வந்தாரோ அதுவரை! விடுதலைப்புலிகள் நம் சமுதாயத்திற்கு செய்த அநியாய அக்கிரமங்களை ஜவாஹிருல்லா சாயப் வேண்டுமானால், கேவலம் ஓட்டுக்காக மறந்திருக்கலாம். ஆனால் உண்மையான இஸ்லாமிய உணர்வுள்ள நாங்கள் மறந்துவிடவில்லை. என் பாட்டனார் கொழும்பில் உள்ள வவுனியாவில் தான் துணி கடை வைத்து இருந்தார். 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் எல்லாம் காலி செய்து ஓடுங்கள் என கொடூர புலிகள் உத்தரவிட்ட போது அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் சேர்ந்து என் பாட்டனாரும் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீசின கையும் வெறுங்கையுமாக வெளியேறினார். பிறகு அந்தப்பாவிகள் கண்ட இடங்களில் கண்ட முஸ்லிம்களை குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். காத்தான்குடி பள்ளிவாசலிலே அவர்கள் ஆடிய வெறியாட்டம் இன்னமும் யார் மனதையும் விட்டு அகலவில்லை. ஆனால் அதையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழக புலி சீமானுடன் கைகோர்த்துக் கொண்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் எப்படி ஜவாஹிருல்லா சாயப்பால் எங்கள் மக்களிடம் வாக்கு கேட்க முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் நடவடிக்கை மூலமாக இதை நான் நேரில் கண்டு விட்டேன்.
ராமநாதபுரத்தில் பிஜெ சாயப் மீட்டிங் நடத்தினார். அந்த மீட்டிங்கைப் பார்த்த பிறகு, எனக்கு சில விசயங்கள் குழப்பமாக இருந்தது. சுனாமி காசை கொள்ளையடித்ததாக தமுமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அதுபோல வக்ப் இடங்களில் தமுமுக செய்த மோசடி குறித்தும் பட்டியல் போட்டார். ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுகுறித்து நீங்கள் பதில் அளிக்கும் போது அதை நாங்கள் மறுமையில் சந்திப்போம் என சொல்லியிருந்தார். இங்கே உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை உடைத்து ஆதாரப்பூர்வமாக அள்ளிப்போட்டு நிருபித்து பொதுமேடையில் பிஜெ சாயப்பின் முகமூடியைக் கிழிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் அது சம்பந்தமாக பதில் அளிக்காமல் எதையெதையோ காரணம் இல்லாமல் உளறியதைத் தான் காண்முடிந்தது. குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் என்பது போல இருக்கிறது தமுமுகவினரின் நடவடிக்கை.
அடுத்து பிஜெ சாயப் மனநோயாளி எனவும் உங்களுடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட பகைக்காக மட்டும் தான் திமுகவை ஆதரிக்கிறார் என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப் திமுகவை பகைத்து அதிமுகவை ஆதரிக்க என்ன காரணம் சமுதாய நலனா? இல்லையே! திமுக இரண்டு தொகுதி தராதது தானே! கருணாநிதி இரண்டு தொகுதி தந்து இருந்தால், கருணாநிதி செய்த துரோகத்தை எல்லாம் மறந்து விட்டு இன்றைக்கும் அவரோடு இருந்திருப்பீர்கள் என்பதை தாங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் முன்பு அளித்த பேட்டிகளில் இருந்து அறியமுடிகிறது. சமுதாய நலன் கருதியா தமுமுக திமுகவை விட்டு வெளியேறியது? இன்றைக்கு அதிமுகவிடன் சேர்ந்திருக்கும் தமுமுக, சமுதாய நலன் சார்ந்த எந்த கோரிக்கையை முன்வைத்து கூட்டணி அமைத்தது? இட ஒதுக்கீடு பற்றி அதிமுக எதுவும் சொல்லாத போதும் வாய்மூடி மவுனியாக இருந்தது தமுமுக. நமக்கு கிடைத்த இடஒதுக்கீடு (சீட் ஒதுக்கீடு) போதும் என்று இருந்து விட்டது போலும். இவர்களெல்லாம் சமுதாய நலனுக்காக போராடப்போகிறார்களாம்.
அன்றைக்கு அதிமுகவை எதிர்த்துப் பேசிய ஜவாஹிருல்லா சாயப்பிற்கும், இன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசுகிற ஜவாஹிருல்லா சாயபுக்கும் நிறைய வித்தியாசங்கள். இதில் முழுக்க முழுக்க சுயநலன்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு கிடைத்த தொகுதிகளின் அடிப்படையில் மட்டும் தான் அவர்களின் நடவடிக்கை இருக்கிறது.
ஆனால் அன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசிய பிஜெ சாயப்புக்கும், இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து பேசும் பிஜெ சாயப்புக்கும் உள்ள ஒற்றுமை சமுதாய இடஒதுக்கீடு கருதி மட்டுமே இருக்கிறது.
மூன்று தொகுதிகளைப் பெற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே அதிமுகவை ஆதரிக்கும் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் சமுதாய நலனுக்காக திமுகவை தேர்தலுக்கு மட்டும் ஆதரிக்கும் பிஜே சாயப்பை மனநோயாளி என்று சொல்கிறார். ஆனால் தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் போட்டியிடாமல்,தான் வேலை செய்த வேலூர் தொகுதியில் போட்டியிடாமல், தான் வாழ்ந்து வருகின்ற சென்னையில் கூட போட்டியிடாமல் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் ராமநாதபுரம் தொகுதியைத் தேர்ந்ததெடுக்க என்ன காரணம்.?
போன நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுக தனித்துப் போட்டியிட்ட போது அதிகம் வாக்கு வாங்கியது ராமநாதபுரத்தில் மட்டும் தான். அதனால் தான் ராமநாதபுரத்தில் முன்னர் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற சலிமுல்லாகானுக்கு கூட வாய்ப்பு கொடுக்காமல் ஜவாஹிருல்லா சாயப் போட்டியிட்டார். ஆக ஜவாஹிருல்லா சாயப்பின் நோக்கமே ஏதாவது ஒரு பதவியைப் பிடித்து விட வேண்டும் என்பது தான். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப்பை நான் பதவி வெறியன் என்று சொல்லலாமா.
அடுத்து பிஜெபிக்கு தான் பிஜெ ஓட்டுக்கேட்டார் என்று ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருக்கிறார். பிஜெ சாயப் பிஜேபிக்கு தான் ஓட்டுக்கேட்டார் என்றால், இவர் அசன் அலியை பிஜேபிகாரர் என்று சொல்ல வருகிறார், என்று தான் அர்த்தம். ஆனால் அசன் அலி இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளுக்கு ஆதரவாக இன்றுவரை இல்லை. சாய்பாபா இறந்து போனதற்கு இரங்கல் கவிதை வாசிக்கவில்லை. இராமேஸ்வரம் புனிதத் தளத்திற்கு பாலம் அமைத்து தருகிறேன் என்று சொல்லவில்லை. இவ்வளவு துரோகத்தையும் நீங்கள் செய்து கொண்டு அவரை எப்படி பிஜேபிகாரர் என்று சொல்ல முடியும். ஒருவேளை ஜவாஹிருல்லா சாயப்புக்காக வாக்கு கேட்டிருந்தால் பிஜெ சாயப் பிஜேபிகாரனுக்கு வாக்கு கேட்டார் என்று சொல்லலாம் . எனவே கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீசுவதை ஜவாஹிருல்லா சாயப் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் பேரியக்கமாக வளர்ந்து விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக மன நோயாளியாக மாறி உளருவதை நிறுத்திக்கொள்வதே ஜவாஹிருல்லா சாயப்பிற்கு நல்லது. குறைந்தது என்னைப்போல் இன்னும் உங்களை நம்பி ஒட்டிக்கொண்டு இருக்கும் அடிமட்டத் தொண்டனையாவது இழக்காமல் இருக்கும் வழியைக் காணுங்கள். முஸ்லிம்களின் வெறுப்பை மேலும் சம்பாதிக்காதீர்கள்
-கொழும்பார் என். சேக் அப்துல்லா
ராமநாதபுரம்
நன்றி: உணர்வு வார இதழ்